காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
கலக்கப்போவது யாரு, குக்வித் கோமாளி உள்ளிட்ட பல நிகழ்ச்சிகள் மூலம் பிரபலமானவர் நடிகர் பாலா. அதோடு சில திரைப்படங்களிலும் நடித்திருக்கிறார். பொது சேவையிலும் அதிக ஈடுபாடு கொண்டவர். மலைப்பகுதியில் உள்ள கிராம மக்களுக்கு இலவசமாக ஆம்புலன்ஸ் வாங்கி கொடுத்த பாலா, மழை வெள்ளத்தால் பாதிக்கப்பட்ட மக்களுக்கு பொருளாகவும் பணமாகவும் உதவி செய்தார். இப்படி பல சமூக சேவைகளில் ஈடுபட்டு வரும் பாலா, தற்போது மாற்றுத்திறனாளி எம்சிஏ படித்த பட்டதாரி ஒருவர் மூன்று சக்கரம் வாகனம் இல்லாததால் வேலைக்கு செல்ல முடியவில்லை என்று தெரிவித்ததை அடுத்து அவருக்கு மூன்று சக்கர வாகனத்தை வாங்கி கொடுத்து இன்ப அதிர்ச்சி கொடுத்திருக்கிறார். அந்த மாற்றுத்திறனாளியுடன் தான் எடுத்துக் கொண்ட புகைப்படத்தையும் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டிருக்கிறார் பாலா.