நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
‛சுந்தரி' தொடர் மக்கள் மத்தியில் அமோக வரவேற்பை பெற்று வெற்றியடைந்ததை தொடர்ந்து, அந்த தொடரின் இரண்டாவது சீசன் தற்போது ஒளிபரப்பாகி வருகிறது. இதில், கேப்ரில்லா செல்லஸ், ஜிஸ்னு மேனன், கிருஷ்ணன் ரகுநந்தன் ஆகியோருடன் முதல் சீசனில் நடித்த பல பிரபலங்களும் நடித்து வருகின்றனர். தற்போது இந்த தொடரில் மூத்த நடிகையான வடிவுக்கரசி வில்லி கதாபாத்திரத்தில் என்ட்ரியானதை தொடர்ந்து கதை விறுவிறுப்படைந்துள்ளது. இதில் மேலும் சுவாரசியத்தை சேர்க்கும் வகையில் திரைப்பட நடிகை கவுசல்யாவை மீண்டும் நடிக்க வைத்து வருகின்றனர். கவுசல்யா ஏற்கனவே சீசன் 1-ல் நந்தன் பாரதி என்கிற கெஸ்ட் ரோலில் நடித்திருந்தார். தற்போது இந்த நந்தன் பாரதி கதாபாத்திரம் நீட்டிக்கப்பட உள்ளதாக தகவல்கள் வெளியாகி வருகிறது.