கவினுக்கு ஜோடியான பிரியங்கா மோகன் | தெலுங்கு படத்தில் விலைமாதுவாக நடிக்கும் கயாடு லோஹர் | பிரேமலு ஹீரோவின் புதிய படப்பிடிப்பை துவங்கி வைத்த பஹத் பாசில் | கூலி ரிலீஸ் தேதி கவுன்ட் டவுன் போஸ்டர் வெளியானது | “என் உயிருக்கு ஏதாவது ஆனால்...” : நடிகர் பாலாவின் 3-வது மனைவி மருத்துவமனையில் அனுமதி | அடுத்த ஆண்டு துவக்கத்தில் விக்ரமை இயக்கும் பிரேம்குமார் | நடிகை கியாரா அத்வானிக்கு பெண் குழந்தை பிறந்தது | 'குட் பேட் அக்லி' வெளியாகி மூன்று மாதங்கள் : இன்னும் வராத அஜித்தின் அடுத்த பட அறிவிப்பு | 3 நாட்கள் தியேட்டர் வளாகத்திற்குள் ‛நோ' விமர்சனம் : விஷால் வேண்டுகோள் | ரூ.6 கோடியை திருப்பி கேட்கும் தயாரிப்பு நிறுவனம் : பதிலுக்கு ரூ.9 கோடி நஷ்ட ஈடு கேட்கிறார் ரவி மோகன் |
சின்னத்திரையில் ஒரு காலத்தில் ஹாரர் தொடருக்கு நல்ல மதிப்பு இருந்தது. இடையில் சிறிது காலம் ஹாரர் தொடருக்கு வரவேற்பு கிடைக்காத நிலையில், ஹிந்தி சீரியல்களின் டப்பிங் வருகை மீண்டும் அந்த மார்க்கெட்டை தமிழ் சின்னத்திரையில் உருவாக்கியது. இதனை தொடர்ந்து நந்தினி, அருந்ததி போன்ற தொடர்கள் வெளியாகி வெற்றியடைந்த பின், சமீபத்தில் அனாமிகா என்கிற புத்தம் புதிய ஹாரர் தொடர் குறித்த அறிவிப்பு சில மாதங்களுக்கு முன் வெளியானது. ஆனால், |தொடர்ந்து எந்த அப்டேட்டும் வராததால் அந்த சீரியல் டிராப் செய்யப்பட்டதாக பலரும் நினைத்தனர்.
இந்நிலையில், தற்போது அனாமிகா தொடரின் ஷூட்டிங் மீண்டும் தொடங்கியுள்ளதாக செய்திகள் வெளியாகி வருகிறது. இந்த தொடரில் அக்ஷதா தேஷ்பாண்டே என்கிற புது நடிகை அறிமுகமாகிறார். மேலும், ஆனந்தி சீரியலில் நடித்து வரும் தர்ஷக் கவுடா, பாண்டியன் ஸ்டோர்ஸ் 2 தொடரில் கதிர் கதாபாத்திரத்தில் நடித்து வரும் ஆகாஷ் பிரேம்குமார் ஆகியோர் முதன்மை கதாபாத்திரத்திங்களில் நடிக்கின்றனர்.