நள்ளிரவில் சுவாசிகாவுக்கு மெசேஜ் அனுப்பி சந்தேகம் கேட்ட ஐஸ்வர்ய லட்சுமி | அப்பா உடன் நடிக்க நான் ரெடி : ஸ்ருதிஹாசன் | பராசக்தி படப்பிடிப்பு நிறுத்தப்பட்டதா? : இயக்குனர் சுதா விளக்கம் | ரூ.75 கோடி வசூலைக் கடந்த டூரிஸ்ட் பேமிலி | 23 ஆண்டுகளுக்கு பிறகு விஜய் படத்தில் இணைந்த ரேவதி | மலையாளத்தில் அடியெடுத்து வைத்த காந்தாரா இசையமைப்பாளர் | ஆபாச மார்பிங் வீடியோ : சைபர் கிரைமில் கிரண் புகார் | ரஜினியின் கூலி படத்தின் மேக்கிங் வீடியோ வெளியானது | நாளை வெளியாகும் வனிதா விஜயகுமார் படத்தின் ஆடியோ, டிரைலர் | 16 ஆண்டுகள் கழித்து தந்தையின் படத்திற்காக பாடிய ஸ்ருதிஹாசன் |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் பாக்கியலெட்சுமி சீரியலில் செல்வி என்ற கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார் கம்பம் மீனா செல்லமுத்து. சமீபகாலங்களில் இன்ஸ்டாகிராமில் மிகவும் பிரபலமாகி வரும் இவர், தற்போது விபத்தில் சிக்கியுள்ள சம்பவம் ரசிகர்கள் மத்தியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. கடந்த பிப்ரவரி 12ம் தேதி தனக்கு விபத்து ஏற்பட்டதாகவும் தலைக்கு வந்தது தலைப்பாகையோடு போயிற்று எனவும் இன்ஸ்டாகிராம் பதிவில் தெரிவித்துள்ள கம்பம் மீனா, கையில் பெரிய கட்டு போட்டிருக்கும் புகைப்படத்தையும் வெளியிட்டுள்ளார். இதை பார்த்த ரசிகர்கள் அவருக்கு ஆறுதல் கூறி வருகின்றனர்.