அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜெயலெட்சுமி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாத்துறை சார்ந்த பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், 'சமுதாயத்தில் நடிகைகள் என்றாலே தவறான எண்ணம் இருக்கிறது. ஒருமுறை வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க எளிய வழி என்று எனக்கு மெசேஜ் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசுகையில் இரண்டு பெண்களின் படத்தை காட்டி பேரம் பேசினார்கள். ஆபாசமாக போட்டோ அனுப்பினால் 2 லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். இது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். நடிகைகள் என்றாலே இப்படித்தான் என்கிற தவறான எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார்.