ரஜினி, கமல் இணையும் படத்தை இயக்குகிறேனா? : பிரதீப் ரங்கநாதன் சொன்ன பதில் | அஜித் 64வது படத்தில் இயக்குனர் சரண் பணியாற்றுகிறாரா? | காந்தாரா சாப்டர் 1 கிளைமாக்ஸ் சவால்களை வெளியிட்ட ரிஷப் ஷெட்டி | பிரியங்கா மோகனின் ‛மேட் இன் கொரியா' | பாலாஜி மோகன், அர்ஜுன் தாஸ் இணையும் ‛லவ்' | சூரியை கதாநாயகனாக வைத்து படம் இயக்கும் சுசீந்திரன் | கோர்ட் ஸ்டேட் vs நோ படி படத்தின் தமிழ் ரீமேக் புதிய அப்டேட் | 2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? |
சினிமா மற்றும் சின்னத்திரையில் குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகிறார் நடிகை ஜெயலெட்சுமி. இவர் சமீபத்தில் அளித்த பேட்டியில் சினிமாத்துறை சார்ந்த பெண்களுக்கு சமுதாயத்தில் ஏற்படும் பிரச்னைகள் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அந்த பேட்டியில், 'சமுதாயத்தில் நடிகைகள் என்றாலே தவறான எண்ணம் இருக்கிறது. ஒருமுறை வீட்டிலிருந்து பணம் சம்பாதிக்க எளிய வழி என்று எனக்கு மெசேஜ் வந்தது. அதை தொடர்பு கொண்டு பேசுகையில் இரண்டு பெண்களின் படத்தை காட்டி பேரம் பேசினார்கள். ஆபாசமாக போட்டோ அனுப்பினால் 2 லட்சம் தருவதாக பேரம் பேசினார்கள். இது தனக்கு அதிர்ச்சியாக இருந்தது. நான் அளித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து குற்றவாளிகளை கைது செய்தனர். நடிகைகள் என்றாலே இப்படித்தான் என்கிற தவறான எண்ணத்தை முதலில் மாற்ற வேண்டும்' என்று கூறியுள்ளார்.