தணிக்கை நடைமுறையில் உள்ள சிக்கல் : 'பராசக்தி' வெளியீடும் தள்ளிப் போகலாம் | பெண் இயக்குனர் இயக்கிய படமா? ராம்கோபால் வர்மா ஆச்சரியம் | ஜனநாயகன் ரிலீஸ் சிக்கல் : விஜய்க்கு ஆதரவாக குரல் கொடுத்த திரைப்பிரபலங்கள் | தெலுங்கில் மாஸ் காட்டிய 'அகண்டா-2' முதல்... பீல் குட் மூவி 'அங்கம்மாள்' வரை இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | 'ஜனநாயகன்' தள்ளிப்போனதால் நிகிலா விமல் படத்துக்கு அடித்த ஜாக்பாட் | 'பராசக்தி' படத்தில் பசில் ஜோசப் ; உறுதி செய்த சிவகார்த்திகேயன் | சிறப்பு பாடல்களுக்கு இனிமேல் நடனமாட மாட்டேன்!- ஸ்ரீ லீலா வெளியிட்ட தகவல் | 'பராசக்தி'யில் யுவன் சங்கர் ராஜா பாடிய 'சேனைக் கூட்டம்' பாடல் வெளியானது! | கார்த்தியின் 'வா வாத்தியார்' பொங்கலுக்கு திரைக்கு வருகிறதா? | 'தக் லைப்' விவகாரம் : அப்போது குரல் கொடுக்காத விஜய்.. |

எதிர்நீச்சல் தொடரில் ஜான்சி ராணி கதாபாத்திரத்தில் மிரட்டிக் கொண்டிருக்கிறார் நடிகை காயத்ரி. தவிரவும் சினிமா, வெப் தொடர்கள் என பிசியாக வலம் வரும் இவர், ஒரு பி.எச்டி பட்டதாரி ஆவார். மக்கள் மத்தியில் நற்பெயரை பெற்று வரும் காயத்ரி அடிக்கடி ஊடகங்களில் பேட்டி கொடுத்து வருகிறார். அந்த வகையில் அண்மையில் அவர் அளித்த பேட்டி ஒன்றில் மீடூ விவகாரம் குறித்து 'நடிகைகள் தங்களுக்கு நடந்த பாலியல் கொடுமைகளை குறித்து இப்போது சொல்லி வருகிறார்களே?' என்று கேள்வி கேட்கப்பட்டது.
அதற்கு பதிலளித்த காயத்ரி 'ஒரு விஷயம் பிடிக்கவில்லை என்றால் அப்போதே அதை பற்றி சொல்லி விட வேண்டும். எல்லாம் முடிந்த பிறகு சொல்லி ஆறுதல் தேடுவது மிகவும் தப்பு' என்று கூறியுள்ளார். மேலும், 'அட்ஜெஸ்மெண்ட் பிரச்னைகளுக்கு காரணம் பெண்களின் வீக்னஸ் தான். மேலும் அட்ஜெஸ்மெண்ட் செய்வது அவர்களது தனிப்பட்ட விருப்பம். அதை பற்றி ஏன் நீங்கள் கேள்வி கேட்கிறீர்கள்?' என்று முன்னதாக அளித்த சில பேட்டிகளில் காயத்ரி கூறியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.