லோகேஷ் கனகராஜ் ஜோடியாகும் ‛ஜெயிலர்' பட நடிகை | 15வது திருமண நாளை கொண்டாடிய சிவகார்த்திகேயன் - ஆர்த்தி | குடும்பத்துடன் விநாயகர் சதுர்த்தி கொண்டாடிய சல்மான்கான் | ஹன்சிகாவின் விநாயகர் சதுர்த்தி கொண்டாட்டம் | டூரிஸ்ட் பேமிலி இயக்குனருக்கு ஜோடியான அனஸ்வரா ராஜன் | கோலி சோடா தொடர்ச்சி... புதிய பாகத்தின் தலைப்பு அறிவிப்பு | சமுத்திரக்கனி, கவுதம் மேனனின் ‛கார்மேனி செல்வம்' | ஷாலினி பிறந்தநாளுக்கு ரீ ரிலீஸ் ஆகும் ‛அமர்க்களம்' | ஷரிதா ராவ் நடிக்கும் புதிய படம் | நல்லகண்ணுவை சந்தித்து நலம் விசாரித்த சிவகார்த்திகேயன் |
பிரபல சின்னத்திரை நடிகர்களான ரச்சிதாவும், தினேஷும் ஒருவரையொருவர் காதலித்து திருமணம் செய்து கொண்டனர். ஆரம்பத்தில் மகிழ்ச்சியான தம்பதிகளாக வாழ்ந்து வந்த இருவரும் ஒருக்கட்டத்தில் தனித்தனியாக பிரிந்து வாழ்ந்து வருகின்றனர். ஒருபுறம் தினேஷ் உருகி உருகி ரச்சிதாவிற்காக குரல் கொடுக்க, ரச்சிதாவோ தினேஷுடன் இனி சேர்ந்து வாழ வாய்ப்பேயில்லை என்றவாறு பேசி வருகிறார்.
இந்நிலையில், இவர்கள் இருவரும் உண்மையில் பிரிந்ததற்கான காரணம் என்னவென்று சோசியல் மீடியாவில் தகவல் உலா வருகிறது. அதாவது நடிப்பதற்கு சான்ஸ் கிடைக்காத சந்தர்ப்பத்தில் தினேஷ் நாச்சியார்புரம் என்ற சீரியலை தயாரித்தார். இதற்காக அவர் பெரிய தொகையை கடனாகவும் வாங்கியுள்ளார். துரதிர்ஷ்டவசமாக நாச்சியார்புரம் சீரியல் பாதியிலேயே நிறுத்தப்பட்டது. இதனால் கடனில் சிக்கித் தவித்த தினேஷ் மீது வழக்குகள் பாய்ந்தது. அதில் தினேஷின் மனைவி ரச்சிதாவின் பெயரையும் இணைத்துவிட்டனர். இதனால் இருவருக்குமிடையே தகராறு ஏற்பட்டுள்ளது. இந்த கோபத்தில் தான் ரச்சிதா தினேஷுடன் சண்டைபோட்டு பிரிந்துள்ளதாக சின்னத்திரை வட்டாரங்களிலில் பேச்சு அடிப்பட்டு வருகிறது.