காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் ஆதி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகர் பவாஸ் சயானி நடித்து வருகிறார். இவர் கயல் தொடரிலும் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடர் டிஆர்பியில் முன்னேற்றம் கண்டு வருவதுடன் ஆதியாக நடிக்கும் பவாஸுக்கும் ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்து வந்தது.
இந்நிலையில், நடிகர் பவாஸ், ‛மோதலும் காதலும்' தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தனது அறிவித்துள்ளார். அவரது பதிவில், 'சில எதிர்பார்க்க முடியாத சூழலால் மோதலும் காதலும் தொடரிலிருந்து நான் விலகிவிட்டேன். இதுபோல் ஒரு நல்ல ப்ராஜெக்டில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. வேறொரு சீரியலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அன்புடன் ஆதி' என்று கூறியுள்ளார்.
அதேசமயம் அவர் கயல் சீரியலை விட்டு விலகியதாக எந்தவொரு தகவலும் இல்லை.