''சகுனிகள் நிறைந்த உலகம்; நல்லவனா இருந்தா பிழைக்க முடியாது'' - ரஜினி பேச்சு | பிளாஷ்பேக் : ராஜா என்னை மன்னித்துவிடு... கைவிடப்பட்ட கமல் - ருத்ரைய்யா படம் | பிளாஷ்பேக் : ஒரே வருடத்தில் 9 படங்களில் நடித்த சிவாஜி | இடைவெளிக்குப் பின் படப்பிடிப்பில் அனுஷ்கா | நாகேஸ்வரராவ் நூற்றாண்டு விழாவில் சிரஞ்சீவிக்கு விருது: அமிதாப் வழங்குகிறார் | வேதிகா உழைப்பாளி, சன்னி லியோன் மனிதநேயர் : பிரபுதேவா புகழாரம் | 16 ஆண்டுகளுக்கு பிறகு இணையும் மம்முட்டி, மோகன்லால் | பழம்பெரும் மலையாள நடிகை கவியூர் பொன்னம்மா காலமானார் | என்னை பற்றி என்ன வேண்டுமானாலும் பேசுங்க... அந்த பெண்ண பேசாதீங்க : ஜெயம் ரவி பேட்டி | என் கவுன்டர் என்பது ஹீரோயிசமா... இல்ல குற்றத்தை தடுக்கும் நடவடிக்கையா... : ‛வேட்டையன்' பிரிவியூ வெளியானது |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் சீரியலில் ஆதி என்கிற முக்கிய கதாபாத்திரத்தில் சின்னத்திரை நடிகர் பவாஸ் சயானி நடித்து வருகிறார். இவர் கயல் தொடரிலும் வில்லனாக நடிக்கிறார் என்பது குறிப்பிடத்தக்கது. கடந்த 5 மாதங்களாக ஒளிபரப்பாகி வரும் மோதலும் காதலும் தொடர் டிஆர்பியில் முன்னேற்றம் கண்டு வருவதுடன் ஆதியாக நடிக்கும் பவாஸுக்கும் ரசிகர்களின் பாராட்டுகள் கிடைத்து வந்தது.
இந்நிலையில், நடிகர் பவாஸ், ‛மோதலும் காதலும்' தொடரிலிருந்து விலகுவதாக அதிகாரப்பூர்வமாக தனது அறிவித்துள்ளார். அவரது பதிவில், 'சில எதிர்பார்க்க முடியாத சூழலால் மோதலும் காதலும் தொடரிலிருந்து நான் விலகிவிட்டேன். இதுபோல் ஒரு நல்ல ப்ராஜெக்டில் நான் நடித்தது மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. எனக்கு அன்பும் ஆதரவும் கொடுத்த அனைவருக்கும் நன்றி. வேறொரு சீரியலில் உங்களை மீண்டும் சந்திக்கிறேன். அன்புடன் ஆதி' என்று கூறியுள்ளார்.
அதேசமயம் அவர் கயல் சீரியலை விட்டு விலகியதாக எந்தவொரு தகவலும் இல்லை.