மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
விஜய் டிவி சீரியல்களில் அறிமுகமாகி பிரபலமாகியுள்ள ஷ்ரவந்திகா ஸ்ரீகாந்த் தற்போது தெலுங்கு சீரியலில் ஹீரோயினாக நடிக்க உள்ளார். கோயம்புத்தூரில் பிறந்து வளர்ந்த ஷ்ரவந்திகா விசுவல் கம்யூனிகசேன் படித்து முடித்த பின் ஷார்ட் பிலிம்களில் நடித்து வந்தார். அதன் பின் விஜய் டிவியில் 'தென்றல் வந்து என்னை தொடும்', 'ஈரமான ரோஜாவே' சீசன் 2 வில் ஆகிய தொடர்களின் மூலம் சின்னத்திரை ரசிகர்களின் கவனத்தையும் ஈர்த்துள்ளார்.
இந்நிலையில், தமிழில் சப்போர்ட்டிங் ரோலில் நடித்து வந்த ஷ்ரவந்திகாவுக்கு தெலுங்கு சீரியலில் ஹீரோயினாகும் வாய்ப்பு கிடைத்துள்ளது. ஜீ தெலுங்கு சேனலில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'ஜபிலி கோசம் ஆகாசமல்லே' என்ற தொடரில் இரண்டு கதாநாயகிகளில் ஒருவராக ஷ்ரவந்திகா நடித்து வருகிறார். அதன் புரோமோ அண்மையில் வெளியாகிய நிலையில் தெலுங்கு ரசிகர்களுடன் தமிழ் ரசிகர்களும் சேர்ந்து ஷ்ரவந்திகாவை வாழ்த்தி வருகின்றனர்.