ஏகப்பட்ட நிபந்தனைகள் விதித்த தீபிகா படுகோனே : வெளியேறவில்லை.. வெளியேற்றப்பட்டார் | போலீஸ் பாதுகாப்பை மீறி சல்மான் கான் வீட்டுக்கு செல்ல முயன்ற பெண் கைது | மைசூர் சாண்டல் சோப் தூதராக தமன்னா நியமனம் : வலுக்கும் எதிர்ப்பு | ரவி மோகன், ஆர்த்திக்கு கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு | 24 ஆண்டுகளுக்கு பின் தமிழில் ரவீனா டாண்டன் | முன்னாள் மனைவியிடம் மன்னிப்பு கேட்ட ஏஆர் ரஹ்மான் | நான் நல்ல குடும்பத்தை சேர்ந்த பெண் : பாடகி கெனிஷா பதிவு | வதந்தி 2 வெப்சீரிஸின் படப்பிடிப்பு எப்போது? | ஹீரோவான கேஜேஆர் ஸ்டுடியோஸ் தயாரிப்பாளர் ராஜேஷ்! விளையாட்டு வீரராக நடிக்கிறார்!! | 'தக்லைப்' படத்தில் எனது கேரக்டர் விமர்சிக்கப்படும்! - திரிஷா வெளியிட்ட தகவல் |
சந்திரலேகா தொடர் நீண்ட நாட்கள் ரசிகர்களின் பேராதரவை பெற்று வெற்றியடைந்தது. 2014 ஆம் ஆண்டு ஆரம்பமான இந்த தொடர் 6 ஆண்டுகளுக்கு மேலாக ஒளிபரப்பாகி கடந்த 2022 ஆம் ஆண்டில் தான் நிறைவடைந்தது. இந்த 6 ஆண்டிலும் இந்த தொடரில் நடித்த இரண்டு கதாநாயகிகளான ஸ்வேதா பண்டேகரும், நாகஸ்ரீயும் இறுதி வரை மாறவில்லை. அதனாலேயே இவர்களுக்கு ரசிகர்கள் அதிகம். அதிலும், வில்லியாக நடித்த நாகஸ்ரீ தமிழில் அறிமுகமான முதல் சீரியலிலேயே வில்லியாக அருமையாக நடித்திருந்தார். இந்த தொடர் முடிந்த பிறகு ஸ்வேதா பண்டேகர் திருமணம் செய்து கொண்டு செட்டிலாகிவிட்டார். ஆனால், நாகஸ்ரீ கன்னடத்தில் பிசியாக சீரியல் நடித்து வருகிறார். அவர் சக நடிகர்களுடன் ஷூட்டிங் ஸ்பாட்டில் நடனமாடி வெளியிட்டுள்ள வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. அதை பார்க்கும் தமிழ் ரசிகர்கள் நாகஸ்ரீயை சீக்கிரமே தமிழில் கம்பேக் கொடுக்கச் சொல்லி கேட்டு வருகின்றனர்.