நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவத்திற்கு பொல்லாதது பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

பிரபல சின்னத்திரை தொகுப்பாளினியான டிடி என்கிற திவ்யதர்ஷினி சில ஆண்டுகளுக்கு முன் ஸ்ரீகாந்த் என்பவரை காதலித்து திருமணம் செய்துகொண்டார். ஆனால், திருமணத்திற்கு பின் இருவருக்குமிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக விவகாரத்து செய்து பிரிந்துவிட்டார். தற்போது 36 வயதாகும் டிடி, சிங்கிளாக தான் வாழ்ந்து வருகிறார். இதற்கிடையில் டிடிக்கு விரைவில் இரண்டாவது திருமணம், இவர் தான் மாப்பிள்ளை அவர் தான் மாப்பிள்ளை என பல வதந்திகள் சோஷியல் மீடியாவில் பரவி வருகிறது.
இதுகுறித்து சமீபத்திய பேட்டியில் பதிலளித்துள்ள டிடி, 'சோஷியல் மீடியாவில் வரும் வதந்திகளுக்கெல்லாம் என்னால் பதில் சொல்ல முடியாது. எனக்கு திருமணம் என்றால் வெளியே தெரிய தான் போகிறது. திருமணம் என்பது சாதனை அல்ல. பத்து வருடத்திற்கு முன் திருமணம் குறித்து இருந்த புரிதல் இப்போது மாறியிருக்கிறது. எல்லோருக்கும் திருமணம் என்பது அவசிய தேவையும் கிடையாது. என்னுடைய வாழ்க்கை என்னுடைய விதி. சோஷியல் மீடியாவில் என்னை பற்றி வரும் விஷயங்களுக்கு நான் கவலைப்பட மாட்டேன். நான் எப்படிப்பட்டவள் என்று எனக்கு தெரியும். நீங்கள் யாரும் சான்றிதழ் தரவேண்டாம்' என கூறியுள்ளார்.