சிரஞ்சீவி ரசிகர்களிடம் மன்னிப்பு கேட்ட கீர்த்தி சுரேஷ்! | லாக் டவுன் டிரைலர் வெளியானது | நடிகைகள் அம்பிகா, ராதாவின் தாயார் காலமானார் | மலையாள சினிமாவில் முதன்முறையாக ஞாயிற்றுக்கிழமை வெளியாகும் படம் | மம்முட்டியின் 'களம்காவல்' புதிய ரிலீஸ் தேதி அறிவிப்பு | பிரபுவுக்கு ஜோடியாக மஞ்சு வாரியர் நடித்து ஒரு பாடல் படப்பிடிப்புடன் 98லேயே நின்றுபோன தமிழ் படம் | நிரப்ப முடியாத வெற்றிடம் : கணவர் தர்மேந்திரா மறைவு குறித்து ஹேமமாலினி உருக்கம் | மகள் நடிக்கும் படப்பிடிப்பு தளத்திற்கு விசிட் அடித்த மோகன்லால் ; கெஸ்ட் ரோலில் நடிக்கிறாரா? | ‛அஞ்சான்' ரீ ரிலீஸில் வெற்றி பெற்றால் அஞ்சான் 2 உருவாகும் : லிங்குசாமி | மீண்டும் ரஜினியுடன் இணைந்த விஜய் சேதுபதி? |

ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் தவமாய் தவமிருந்து தொடரில் ஜோடியாக நடித்து வந்த சந்தியா மற்றும் ப்ரிட்டோ மனோ இருவரும் ஒருவரையொருவர் காதலித்து வந்தனர். இவர்களுக்கு கடந்த ஜனவரி 25ம் தேதி நிச்சயதார்த்தம் முடிந்தது. இதனையடுத்து சில தினங்களுக்கு முன் தவமாய் தவமிருந்து சீரியலை விட்டு இருவருமே விலகிவிட்டனர். இதற்கான காரணம் என்ன? என்று ரசிகர்கள் குழம்பி வந்த நிலையில், நேற்றைய தினம் இருவருக்கும் திடீரென திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணமானது இந்து, கிறிஸ்துவ முறைப்படி கோலாகலமாக நடந்து முடிந்துள்ளது. தற்போது இவர்களது திருமண புகைப்படங்கள் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில் ரசிகர்கள் பலரும் சந்தியா - ப்ரிட்டோ மனோவுக்கு திருமண வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.




