அஸ்வத் மாரிமுத்துவிற்கு விண்ணப்பித்த 15 ஆயிரம் உதவி இயக்குனர்கள்! | கவுதம் ராம் கார்த்திக் 19வது படத்தின் படப்பிடிப்பு துவங்கியது! | ''இப்போ ரிஸ்க் எடுக்கலைனா.. எப்பவும் இல்ல'': சினிமா என்ட்ரி குறித்து மனம்திறந்த காவ்யா அறிவுமணி | த்ரிவிக்ரம் இயக்கத்தில் தனுஷ்? | குட் பேட் அக்லி - முன்பதிவு நிலவரம் என்ன? | அஜித், தனுஷ் கூட்டணி அடுத்த கட்டத்திற்கு நகர்கிறது! | 'ரெட்ட தல' படத்தின் புதிய அப்டேட்! | ராஜமவுலியுடன் இணையாதது ஏன்? சிரஞ்சீவி விளக்கம் | சென்னையை விட்டு சென்றது ஏன்? சசிகுமார் விளக்கம் | தமிழிலும் வெளியாகும் 'இத்திக்கர கொம்பன்' |
'1987ம் ஆண்டு தூர்தர்ஷனில் ஒளிபரப்பாகி பெரிய வரவேற்பை பெற்ற தொடர் ராமாயணம். ஞாயிற்றுக்கிழமை எப்போது வரும் என்று காத்துக்கிடந்து பார்த்த தொடர். ஒவ்வொரு டிவிக்கு முன்னாலும் ஏராளமான மக்கள் அமர்ந்து பார்த்த தொடர். அந்த காலத்திலேயே ராமானந்த சாகர் பெரிய பட்ஜெட்டில் தயாரித்த தொடர். இதில் அருண் கோவில் ராமராகவும், தீபிகா சீதையாகவும், குத்துச்சண்டை வீரர் தாரா சிங் அனுமனாகவும் நடித்திருந்தனர்.
உலகிலேயே அதிகம் பேரால் பார்க்கப்பட்ட தொலைக்காட்சி தொடர் என்ற உலக சாதனையை படைத்தது. கொரோனா ஊரடங்கின்போது தூர்தர்ஷன் தொலைக்காட்சி 'ராமாயணம்' தொடரை 33 ஆண்டுகளுக்குப் பின் மறு ஒளிபரப்பு செய்தது. இந்த நிலையில் இந்த தொடரை 3வது முறையாக மீண்டும் ஒளிபரப்பாகிறது. ஷெமாரூ டிவியில் இந்த தொடர் இன்று (ஜூலை 3) முதல் தினமும் இரவு 7.30 மணிக்கு ஒளிபரப்பாக உள்ளது. இத்தொடர் மொத்தம் 78 எபிசோட்களை கொண்டது. 'ஆதிபுருஷ்' படம் கடும் விமர்சனத்தை சந்தித்து வரும் நேரத்தில் 'ராமாயணம்' மீண்டும் ஒளிபரப்பாவது முக்கியமாக பார்க்கப்படுகிறது.