மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
சின்னத்திரை நடிகை ரச்சிதா மஹாலெட்சுமிக்கு 'சரவணன் மீனாட்சி' தொடருக்கு பின் ரசிகர்கள் எண்ணிக்கை அதிகரித்தது. தொலைக்காட்சி சீரியல்களில் முன்னணி நடிகையாக வலம் வந்த ரச்சிதா, நடிகர் தினேஷை காதலித்து கடந்த 2013 ஆண்டும் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு குழந்தைகள் இல்லை. இதற்கிடையில் கருத்து வேறுபாடால் இருவரும் பிரிந்து கடந்த சில மாதங்களாக தனித்தனியே வாழ்ந்து வருகின்றனர்.
இந்நிலையில், தனியே வாழும் பெண்களும் வேலை செய்யும் பெண்களும் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்ற உத்தரவை பாம்பே உயர்நீதிமன்றம் அண்மையில் அறிவித்தது. அந்த தீர்ப்பை வரவேற்று இன்ஸ்டாகிராமில், 'இதுபோதும். இனி இதிலிருந்து பார்த்துகொள்ளலாம்' என ரச்சிதா பதிவிட்டுள்ளார்.
பிக்பாஸ் வீட்டில் ஏற்கனவே சொன்னது போல் ரச்சிதா குழந்தையை தத்தெடுத்து வளர்க்கும் தனது முடிவில் உறுதியாக இருக்கிறார் என்பது இந்த பதிவின் மூலம் தெரியவருகிறது.