அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
விஜய் டிவியின் ஹிட் தொடர்களில் ஒன்றான ராஜா ராணி சீசன்2வில் ஆல்யா மானசா விலகியதற்கு பின் ரியா விஸ்வநாத் என்ற நடிகை கடந்த ஒருவருடமாக நடித்து வந்தார். சில தினங்களுக்கு முன் திடீரென ராஜா ராணி 2வில் இனி நான் இல்லை என சோகமாக வீடியோ வெளியிட்டு தான் விலகியதை ரசிகர்களிடத்தில் தெரியப்படுத்தினர். தற்போது புது சந்தியாவாக ஆஷா கவுடா நடித்து வருகிறார்.
இந்நிலையில், ரியாவிடம் ரசிகர்கள் சிலர் சீரியலில் இருந்து விலகியதற்கான காரணங்களை பலவாறாக கேட்டுள்ளனர். 'திருமணத்தின் காரணமாக விலகினீர்களா?' என ரசிகர் ஒருவர் கேட்க, 'தனக்கு திருமணமாக 2 முதல் 3 வருடம் ஆகுமென்றும் திருமணத்தின் காரணமாக சீரியலை விட்டு விலகவில்லை' என்று தெளிபடுத்தியிருந்தார்.
மற்றொரு ரசிகர் 'பிரைம் டைம் சீரியலை விட்டு ஏன் விலகினீர்கள்?' என்று கேட்டிருந்தார். அதற்கு ரியா,'எனக்கே ஆச்சரியமாக இருக்கிறது' என்று கூற ரசிகர்கள் பலரும் அதிர்ச்சியடைந்துள்ளனர்.
ரியாவின் பதில்களிலிருந்து ரியா சீரியலை விட்டு விலகவில்லை, வெளியேற்றப்பட்டிருக்கிறார் என்று புரிய வருகிறது. இதனால் ரியாவின் ரசிகர்களில் சிலர் அதிருப்தி அடைந்துள்ளனர்.