பிளாஷ்பேக் : பாலச்சந்தரை பயமுறுத்திய நெகட்டிவ் சென்டிமென்ட் | புதிய சாதனை படைக்கத் தவறிய பிரபாஸின் 'ரிபெல் சாப்' பாடல் | நாக சைதன்யாவின் புதிய பட டைட்டிலை அறிவித்த மகேஷ்பாபு | இ.வி.கணேஷ்பாபுவின் 'ஆநிரை' குறும்படத்திற்கு கோவா திரைப்பட விழாவில் பாராட்டு | பிரித்விராஜ் படத்தை ஓவர்டேக் செய்யும் சிறிய நடிகரின் படம் | சிறையில் இருக்கும் நிலையில் நடிகர் தர்ஷினின் பட ரிலீஸ் தேதி அறிவிப்பு | கில்லி பாணியில் அடுத்த படத்தை இயக்கும் கீர்த்தீஸ்வரன் | 'திரெளபதி 2' படத்தில் ரக்ஷனாவின் பர்ஸ்ட் லுக் வெளியீடு | ஜிம்மில் பீஸ்ட் மோடில் எடுத்த புகைப்படத்தை வெளியிட்ட சமந்தா | நடிகர் அஜித்துக்கு 'ஜென்டில்மேன் டிரைவர்' விருது |

விஜய் டிவியின் 'பாக்கியலெட்சுமி' மற்றும் 'செல்லம்மா' ஆகிய தொடர்களில் நடித்து வந்த திவ்யா கணேஷ், திடீரென செல்லம்மா தொடரிலிருந்து விலகினார். இதனையடுத்து திவ்யா கணேஷ் தனிப்பட்ட காரணங்களுக்காக தான் சீரியலை விட்டு விலகினார் என்று சிலரும், அந்த தொடரின் நாயகன் அர்னவ் தான் காரணம் என்று சிலரும், டிஆர்பி குறைந்ததால்தான் விலகிவிட்டார் என்றும் பலவாறாக கருத்துகள் எழுந்தன.
இந்நிலையில், சீரியலை விட்டு விலகியதற்கானக் காரணத்தை திவ்யா கணேஷ் அண்மையில் சோஷியல் மீடியா லைவ்வில் வந்த போது ரசிகர்களிடம் தெரிவித்துள்ளார். அதில், 'செல்லம்மா தொடரில் என்னை தொந்தரவு செய்து கொண்டே இருந்தனர். வேலை பார்க்கும் இடத்தில் நிம்மதி இல்லை என்றால் வேலையை விட்டுவிடுவோம் அல்லவா? அதனால் தான் விலகிவிட்டேன். அதே சமயம் பாக்கியலெட்சுமி தொடரில் தொடர்ந்து ஜெனியாக நடிப்பேன். அந்த சீரியலிலிருந்து விலகும் பேச்சுக்கே இடம் இல்லை' என்று கூறியுள்ளார். எனினும், செல்லம்மா தொடரில் தன்னை தொந்தரவு செய்தது யார்? என்ன செய்தார்கள் என்பது குறித்து திவ்யா எதையும் வெளிப்படையாக கூறவில்லை.