லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
2018ம் ஆண்டு கன்னடத்தில் ஒளிபரப்பான 'பிலி ஹெந்தி' என்ற தொடரின் மூலம் அறிமுகமானவர் தேஜஸ்வினி கவுடா. தமிழில் விஜய் டிவியில் ஒளிபரப்பான சுந்தரி நீயும் சுந்தரனும் நானும் தொடரின் மூலம் அறிமுகமானார். அதன்பிறகு 'கல்யாணம் முதல் காதல் வரை', 'ஈரமான ரோஜாவே 2' தொடர்களில் நடித்தார். தற்போது, 'வித்யா நம்பர் 1 ' தொடரில் நடித்து வருகிறார்.
தேஜஸ்வினி கன்னட தொலைக்காட்சி நடிகர் அமர்தீப் என்பவரை கடந்த சில வருடங்களாக காதலித்து வந்தார். கடந்த ஆகஸ்ட் மாதம் இருவருக்கும் திருமண நிச்சயதார்த்தம் நடந்தது. அப்போது நிச்சயிக்கப்பட்டபடி இருவரது திருமணமும் டிச., 14 அன்று நடந்தது. புதுமண தம்பதிகளுக்கு சின்னத்திரையுலகினர் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.