கார்த்தி நடிக்கும் ‛வா வாத்தியார்' ரிலீஸ் தேதி அறிவிப்பு | தமிழகம் பக்கமே வரலை... ஆனாலும் தமிழில் ஹிட் | பக்தி மயத்தில் கோலிவுட் பார்ட்டிகள் | ‛‛2 ஆயிரம் சம்பளம் கேட்டேன், 4 லட்சம் கொடுத்தார் நட்டி'': சிங்கம்புலி நெகிழ்ச்சி | சொந்த செலவில் பிளைட்டில் வந்து ரஞ்சித்துக்கு உதவிய விஜய்சேதுபதி | கன்னடத்தில் அதிக வசூல் படங்கள் : இரண்டாம் இடம் பிடித்த 'காந்தாரா சாப்டர் 1' | அடுத்தடுத்து வெளியாகும் கவின் படங்களின் அப்டேட் | கன்னட பிக்பாஸ் அரங்கு 'சீல்' வைக்கப்பட்டது - அரசு நடவடிக்கை | பிளாஷ்பேக்: இயக்குநர் துரையின் கலைப்பசிக்கு தீனி போட்ட காவியத் திரைப்படம் | தனிப்பட்ட வாழ்க்கையில் கேமரா வைக்க முடியாது: ராஷ்மிகா மந்தனா |
சின்னத்திரை நடிகர்களான அர்னவ் - திவ்யா ஸ்ரீதரின் குடும்ப பிரச்னை சமீபத்தில் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்று சோஷியல் மீடியாக்களிலும் வைரலானது. திவ்யா ஸ்ரீதருக்கு ஆதரவாக பலரும் குரல் கொடுக்க, அதுவரை திவ்யா மீதுதான் தவறு என கூறிவந்த அர்னவ் அமைதியானார். இதற்கிடையில் நீதிமன்ற காவலில் வைக்கப்படிருந்த அர்னவுக்கு பெயில் கிடைத்தது. வெளியே வந்த அர்னவ் தான் நடித்து வந்த செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்கவிருப்பதை ஷூட்டிங் ஸ்பாட் புகைப்படங்களுடன் கெத்தாக வெளியிட்டார். எனினும், திவ்யாவுடனான பிரச்னை என்ன ஆயிற்று? இருவரும் சேர்ந்தார்களா? என்பது பற்றிய தகவல்கள் எதுவும் தெளிவாக தெரியவில்லை. மதம் மாறி திருமணம் செய்ததால் திவ்யா ஸ்ரீதரின் பெற்றோரும் அவருடன் பேசுவதாக தெரியவில்லை. இந்நிலையில், கர்ப்பமாக இருக்கும் திவ்யா ஸ்ரீதருக்கு மிகவும் சிம்பிளான முறையில் சக நடிகர்கள் மற்றும் நண்பர்கள் சேர்ந்து வளையல் போடும் நிகழ்ச்சியை செய்துள்ளனர். அந்த நெகிழ்வான தருணத்தை வீடியோவாக பகிர்ந்துள்ள திவ்யா, 'ஆசிர்வதிக்கப்பட்டதாக உணர்கிறேன்' என நெகிழ்ச்சியாக பதிவிட்டுள்ளார்.