நாகார்ஜூனா ரசிகையாக கை தட்டியதில் நானும் ஒருவர்! - அமலா அக்கினேனி | இயக்குனராக கென் கருணாஸ் : அதிகாரப்பூர்வ அறிவிப்பு | ரஜினி, சுந்தர்.சி கூட்டணியில் புதிய படம்? | தீபாவளி பண்டிகையையொட்டி ரசிகர்களுக்கு 'டபுள் ட்ரீட்': இந்த வார ஓடிடி ரிலீஸ்...! | பிரபாஸ் பிறந்தநாளில் ரசிகர்களுக்கு இரட்டை விருந்து | தீபிகா படுகோனேவின் குரல் இனி மெட்டா ஏஐ-யில் ஒலிக்கும் | டாக்ஸிக் படப்பிடிப்பில் பலத்த பாதுகாப்பு | பைசன் டைட்டிலுக்கு மன்னிப்பு கேட்ட மாரி செல்வராஜ் | ஹீரோவானார் 'திருமணம்' சித்து: மனைவியை புகழ்ந்து பேச்சு | பிளாஷ்பேக் : இளையராஜா ஆதிக்கத்தால் தாக்குபிடிக்க முடியாத தேவேந்திரன் |
ஆபூர்வராகம், கேளடி கண்மணி, சில்லுன்னு ஒரு காதல் உள்ளிட்ட பல ஹிட் தொடர்களில் நடித்து பிரபலமானவர் ஏகவள்ளி. இவர், பிரபல சின்னத்திரை நடிகையான யமுனா சின்னத்துரையின் சகோதரி ஆவார். ஏகவள்ளி தன்னுடன் நடித்த பெரோஸ்கான் என்பவரை காதலித்து வந்துள்ளார். இருவரும் அடிக்கடி ஒன்றாக சேர்ந்து போட்டோஷூட்டிங் நடத்தி புகைப்படங்களையும் வெளியிட்டு வந்தனர். சில தினங்களுக்கு முன் ஏகவள்ளியும் திடீரென தலையில் துப்பட்டாவுடனும் நெற்றியில் பொட்டு இல்லாமலும் இஸ்லாமிய பெண்ணாகவே மாறியிருந்தார்.
பெரோஸ்கானை திருமணம் செய்ய தான் ஏகவள்ளி மதம் மாறிவிட்டார் என அப்போதே கிசுகிசுக்கள் சோஷியல் மீடியாவில் வலம் வந்தன. இந்நிலையில், யாரும் எதிர்பார்க்காத வகையில் இருவருக்கும் சமீபத்தில் திருமணம் நடந்து முடிந்துள்ளது. இவர்களது திருமணம் எப்போது, எங்கே, எப்படி நடந்தது என்பது குறித்த செய்திகள் இதுவரை வெளியாகவில்லை. ஆனால், ஜீ தமிழ் நடிகரான அம்ருத் கலாம் பெரோஸ்கான், ஏகவள்ளியுடன் எடுத்துக்கொண்ட செல்பி புகைப்படத்தை வெளியிட்டு 'ஸ்வீட்டான சிம்பிளான திருமணம்' என்று வாழ்த்துகள் கூறியுள்ளார்.
இதனை தொடர்ந்து சின்னத்திரை நடிகை நக்ஷத்திராவும் கமெண்டில் வாழ்த்து கூறியுள்ளார். ஆனால், மற்ற பிரபலங்களோ அல்லது யமுனா சின்னத்துரையின் பதிவிலோ ஏகவள்ளியின் திருமணம் குறித்து எந்தவொரு பதிவும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது. ஏகவள்ளி வீட்டாருக்கு இந்த திருமணத்தில் விருப்பமில்லாததே இவர்களது திருமணம் சிம்பிளாக நடைபெற்றதற்கு காரணமாக சொல்லப்படுகிறது.