பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு |
சின்னத்திரை நடிகரான அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் கதாநாயகானாக நடித்து வந்தார். அர்னவ்வின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான திவ்யா ஸ்ரீதர், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சமீபத்தில் போலீஸில் புகார் அளித்திருந்தார். காவல்துறை அர்னவை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அர்னவ்வை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையில் அர்னவ் செல்லம்மா சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் வேறொரு நடிகர் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது ஜாமீன் கிடைத்து வெளிவந்துள்ள அர்னவ், செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் தனது இண்ஸ்டாகிராமில் 'காதலோடு வாழும் வாழ்க்கை ஒருபோதும் சலிக்காது' என்ற கேப்ஷனுடன் தனது கம்பேக்கை உறுதி செய்துள்ளார்