நடிகைகளை இதற்கு மட்டுமே பயன்படுத்துகிறார்கள் : ராதிகா ஆப்தே ஆதங்கம் | சென்சாரில் சிக்கிய பல்டி பட ஹீரோவின் படம் : உயர்நீதிமன்ற நீதிபதிக்காக தனிக்காட்சி திரையீடு | நிபந்தனையுடன் துல்கர் சல்மானின் லேண்ட்ரோவர் கார் திரும்ப ஒப்படைப்பு | கூகுள் கிளவுட் உடன் இணைந்த ஏஆர் ரஹ்மான் | எனக்கு பிடித்தமான ஹீரோ நானி : ருக்குமணி வசந்த் | சூர்யா 47- வது படத்தில் இணையும் பஹத் பாசில் | நீதிமன்றம் கெடுபிடி : வெளிநாட்டு பயணத்தை ரத்து செய்த ஷில்பா ஷெட்டி | அப்பா வேடத்தில் கலக்கிய சரத்குமார், பசுபதி | பவன் கல்யாண் படத்தை இயக்கும் போட்டியில் லோகேஷ், வினோத் | மீண்டும் இணையும் நாகர்ஜூனா, அனுஷ்கா ஜோடி |
சின்னத்திரை நடிகரான அர்னவ் விஜய் டிவியில் ஒளிபரப்பாகும் செல்லம்மா தொடரில் கதாநாயகானாக நடித்து வந்தார். அர்னவ்வின் மனைவியும், சின்னத்திரை நடிகையுமான திவ்யா ஸ்ரீதர், அர்னவ் தன்னை அடித்து துன்புறுத்துவதாக சமீபத்தில் போலீஸில் புகார் அளித்திருந்தார். காவல்துறை அர்னவை கைது செய்த நிலையில், நீதிமன்றம் அர்னவ்வை 15 நாட்கள் நீதிமன்ற காவலில் வைக்கும்படி உத்தரவிட்டது. இதற்கிடையில் அர்னவ் செல்லம்மா சீரியலை விட்டு விலகிவிட்டதாகவும், அவருக்கு பதில் வேறொரு நடிகர் நடிக்கப்போவதாகவும் செய்திகள் வெளியாயின. தற்போது ஜாமீன் கிடைத்து வெளிவந்துள்ள அர்னவ், செல்லம்மா சீரியலில் மீண்டும் நடிக்க ஆரம்பித்துள்ளார். அவர் தனது இண்ஸ்டாகிராமில் 'காதலோடு வாழும் வாழ்க்கை ஒருபோதும் சலிக்காது' என்ற கேப்ஷனுடன் தனது கம்பேக்கை உறுதி செய்துள்ளார்