ரஜினிகாந்த், நானும் இணைவது உறுதி, துபாயில் அறிவித்தார் கமல்ஹாசன் | பெற்றோருக்கு தெரியாமல் ஹாரர் படங்கள் பார்ப்பேன்: அனுபமா | துபாயில் நடைபெற்ற சைமா விருது விழாவில் விஜய்யை வாழ்த்திய திரிஷா! | சிவகார்த்திகேயனின் ‛மதராஸி' படத்தின் இரண்டு நாள் வசூல் வெளியானது! | செப்டம்பர் 12ல் நெட்பிளிக்சில் வெளியாகும் சாயாரா! | கென் கருணாஸ் படத்தில் மூன்று நாயகிகள்! | ‛இட்லி கடை' படத்தில் அஸ்வின் ஆக அருண் விஜய்! | ரவி அரசிடம் விஷால் வைத்த கோரிக்கை! | விஜய் சேதுபதி, பாலாஜி தரணிதரன் கூட்டணி.. படப்பிடிப்பு எப்போது? | மீண்டும் ‛தோசை கிங்' படத்திற்காக மோகன்லால் உடன் பேச்சுவார்த்தை நடத்தும் தா.சே. ஞானவேல்! |
கேரளாவை சேர்ந்த வித்யா மோகன் தமிழில் சில படங்களில் நடித்தார். வெள்ளித்திரை அவருக்கு கைகொடுக்காத நிலையில் சின்னத்திரையில் கடந்த 10 ஆண்டுகளுக்கும் மேலாக ஹிட் சீரியல்களில் லீட் ரோல்களில் நடித்து கலக்கி வருகிறார். தமிழில் இவர் நடித்த 'வள்ளி' நெடுந்தொடர் அமோக வரவேற்பை பெற்றது. தற்போது 'அபியும் நானும்' தொடரில் நடித்து வருகிறார். அண்மையில் பேட்டி ஒன்றில் பேசிய வித்யா மோகன், இனி தாலியை கழட்டி விட்டு நடிக்கமாட்டேன் என ஸ்ட்ரிக்டாக கண்டிஷன் போட்டுள்ளதாக கூறியிருக்கிறார். 'என் தாலி எனக்கு ரொம்ப ஸ்பெஷல். எனக்கு அவர் போட்ட முதல் செயின். அதை கழட்டி வைத்துவிட்டு நடிக்க மாட்டேன். அப்படியொரு நிலை வந்தால் அந்த புராஜெக்டையே வேண்டாம் என கூறிவிடுவேன்' என கூறுகிறார். இந்த பேட்டியை பார்க்கும் பலரும் வித்யா மோகனுக்கு தாலி மீது இருக்கும் செண்டிமெண்டையும் கலாச்சாரத்தை மதிக்கும் அவரது குணத்தையும் வெகுவாக பாராட்டி வருகின்றனர்.