300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
ஒருகாலத்தில் சீரியல் நடிகர்கள் என்றாலே சினிமாவில் வாய்ப்பிழந்தவர்கள், திறமையில்லாதவர்கள் என்று தான் பலரும் கருதி வந்தனர். ஆனால், இன்று சின்னத்திரை நட்சத்திரங்களில் வளர்ச்சியானது சினிமா நடிகர்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு அபரிமிதமாக உள்ளது. ஒரு ப்ராஜெக்டில் நடித்தவர்கள் கூட கார், வீடு என செட்டிலாகி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தி சுபாஷும் இடம்பிடித்துள்ளார். 'பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் அதே சேனலின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே சின்னத்திரை நேயர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீடியா கேரியரில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ள அவர், மோரிசன் கேரேஜ் கார் கம்பெனியின் ஏ-ஸ்டார் என்கிற சொகுசு வகை காரை வாங்கி தனது முதல் கனவை நனவாக்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தை பதிவிட்டுள்ள ஆர்த்திக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி அவரது கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் எனவும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.