காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
ஒருகாலத்தில் சீரியல் நடிகர்கள் என்றாலே சினிமாவில் வாய்ப்பிழந்தவர்கள், திறமையில்லாதவர்கள் என்று தான் பலரும் கருதி வந்தனர். ஆனால், இன்று சின்னத்திரை நட்சத்திரங்களில் வளர்ச்சியானது சினிமா நடிகர்களுக்கே டப் கொடுக்கும் அளவிற்கு அபரிமிதமாக உள்ளது. ஒரு ப்ராஜெக்டில் நடித்தவர்கள் கூட கார், வீடு என செட்டிலாகி வருகின்றனர். அந்த வரிசையில் நடிகை ஆர்த்தி சுபாஷும் இடம்பிடித்துள்ளார். 'பாண்டவர் இல்லம்' தொடரில் நடித்து வரும் ஆர்த்தி சுபாஷ் அதே சேனலின் பல ரியாலிட்டி நிகழ்ச்சிகளையும் தொகுத்து வழங்கி வருகிறார். மிக குறுகிய காலக்கட்டத்திலேயே சின்னத்திரை நேயர்கள் மத்தியில் அவர் மிகவும் பிரபலமாகியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. தற்போது மீடியா கேரியரில் நல்ல வளர்ச்சியை எட்டியுள்ள அவர், மோரிசன் கேரேஜ் கார் கம்பெனியின் ஏ-ஸ்டார் என்கிற சொகுசு வகை காரை வாங்கி தனது முதல் கனவை நனவாக்கியுள்ளார். அந்த மகிழ்ச்சியான தருணத்தை பதிவிட்டுள்ள ஆர்த்திக்கு பலரும் வாழ்த்துகள் தெரிவித்து வருகின்றனர். மேலும், அவரது கடின உழைப்பையும், அர்ப்பணிப்பையும் பாராட்டி அவரது கனவுகள் அனைத்தும் நனவாக வேண்டும் எனவும் அவருக்காக பிரார்த்தனை செய்து வருகின்றனர்.