பிரதீப் ரங்கநாதனை புகழும் கிர்த்தி ஷெட்டி | டிரைலர் உட்பட ஜனநாயகன் படத்தின் அடுத்தடுத்த அப்டேட் | ரவி தேஜா உடன் இணைந்த பிரியா பவானி சங்கர் | 'பிசாசு 2' படத்தில் நிர்வாணக் காட்சியில் நடித்தேனா?: ஆண்ட்ரியா விளக்கம் | 9 வருடங்களுக்கு பிறகு நேரடி தெலுங்கு படத்தில் கார்த்தி | பிளாஷ்பேக்: 'முக்தா' சீனிவாசன் என்ற முத்தான இயக்குநரைத் தந்த “முதலாளி” | ஹீரோயின் ஆனார் லிவிங்ஸ்டன் மகள் ஜோவிதா | சர்வதேச திரைப்பட விழாவில் அனுபமா படம் | 4 ஆண்டுகளுக்கு பிறகு வரும் ராய் லட்சுமி | நடிகை பலாத்கார வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு: தண்டனையிலிருந்து தப்புவாரா திலீப் |

நடிகை ரச்சிதா மகாலட்சுமி சின்னத்திரையின் நயன்தாரா என்று சொல்லும் அளவுக்கு பிரபலமானவர். கடந்த 10 வருடங்களில் தமிழ் சின்னத்திரையில் டாப் சேனல்களில் எல்லாம் நடித்துவிட்டார். தற்போது கலர்ஸ் தமிழ் சேனலில் 'இது சொல்ல மறந்த கதை' என்ற தொடரில் ஒரு சவாலான கதாபாத்திரத்தில் நடித்து வருகிறார். இந்த தொடர் குறித்து அண்மையில் அவர் பேசியுள்ள வீடியோ பலரது கவனத்தை ஈர்த்துள்ளது.
அதில் அவர், 'இதற்கு முன்பு இரண்டு கதைகளை கேட்டிருந்தேன். ஆனால், சொல்ல மறந்த கதையில் ஒரு ஸ்பார்க் இருந்தது. சாதனா கதாபாத்திரத்துடன் என்னால் தனிப்பட்ட முறையில் கனெக்ட் செய்து கொள்ள முடிந்தது. ஏனென்றால் என் வீட்டு உதவியாளர் ஒரு விதவை. குழந்தைகளுக்கான அவரது கடின உழைப்பை நான் பார்த்து வருகிறேன். அவருடன் பேசி புரிந்து கொண்ட பின்பே சாதனா கதாபாத்திரத்தில் நடிக்க ஒப்புக்கொண்டேன்.
இன்று சமூக ஊடகங்கள் மக்களின் ரசனையில் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளது. இனிமேலும் காதல், மனைவி, கணவர், மாமியார் என சீரியல்களை எடுக்க முடியாது. அவர்கள் சிறந்த கதைகளை விரும்புகிறார்கள். எனவே, தொலைக்காட்சியில் நல்ல கதைகளை கொண்டு வருவது முக்கியம்' என கூறியுள்ளார்.