இரவில் சிரித்து பேசிய தந்தையை காலையில் உயிருடன் பார்க்கவில்லை : ஷைன் டாம் சாக்கோ உருக்கம் | இசையமைப்பாளர் ஆனார் இளையராஜா பேரன் | விடுமுறை நாளிலும் வசூலில் ஏமாற்றிய தக் லைப் | நாக சைதன்யாவை காதலித்தபோது கழுத்தின் பின்பகுதியில் குத்திய டாட்டூவை நீக்கிய சமந்தா | தக் லைப் படத்தை புகழ்ந்து பதிவிட்ட இயக்குனர் கார்த்திக் சுப்பராஜ் | சூப்பர் ஹீரோயினாக மாறிய கல்யாணி பிரியதர்ஷன் | ஷோபனாவை அவமதித்த ஊழியர் : படப்பிடிப்பு தளத்தையே நடுங்க வைத்த அமிதாப் பச்சன் | உன்னி முகுந்தன் பிரச்னையில் தலையிட்டு தீர்த்து வைத்த பெப்கா | நடிகையின் தங்கை நகைக்கடையில் 69 லட்சம் நூதன மோசடி செய்த ஊழியர்கள் | விபத்தில் சிக்கிய வில்லன் நடிகரை நேரில் சந்தித்து ஆறுதல் கூறிய சுரேஷ்கோபி |
விஜய் டிவியில் மிக விரைவில் வெளியாகவிருக்கும் புதிய சீரியல் 'சிப்பிக்குள் முத்து'. ரசிகர்கள் மத்தியில் மிகுந்த எதிர்பார்ப்பை கிளப்பியுள்ள இந்த தொடரில், ராஜ் டிவியின் 'கீதாஞ்சலி' சீரியலில் நடித்து வரும் ஜீவா ஹீரோவாக நடிப்பதாக ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. இதனைதொடர்ந்து இந்த தொடரில் இரண்டு ஹீரோயின்கள் நடித்து வருவதாகவும், இதற்கான புரோமோ ஷூட் கூட சமீபத்தில் நடந்து முடிந்துள்ளதாகவும் தகவல் வெளியாகியுள்ளது. ஜீ தமிழில் ஒளிபரப்பாகி வரும் சூப்பர் குயின் நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற லாவண்யா மற்றும் பவ்யாஸ்ரீ ஆகியோர் தான் 'சிப்பிக்குள் முத்து' தொடரில் ஹீரோயின்களாக நடிக்கவுள்ளனர். இதில், பவ்யாஸ்ரீ 'திருமதி ஹிட்லர்' தொடரில் நடித்து பிரபலமானவர். ஆனால், லாவன்யா சின்னத்திரையில் முதன்முதலாக ஹீரோயினாக நடிக்கவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.