பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
கலர்ஸ் தமிழ் சேனல் சமீபகாலமாக புத்தம் புதிய தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நீதிக்காக போராடும் ஒரு விதவைத் தாயின் கதையை சித்தரிக்கும் “இது சொல்ல மறந்த கதை” என்ற தொடரை இன்று (மார்ச் 7) முதல் ஒளிபரப்புகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு இதனை காணலாம்.
இரு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளம் விதவையான சாதனாவின் வாழ்க்கை சம்பவங்களையும் மற்றும் உயிரிழந்த அவளது கணவனின் நற்பெயரை சீரழித்த ஒரு வழக்கில் அவர் தவறு செய்யாத நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான அவளின் போராட்டமும்தான் தொடரின் கதை. இதில் சாதனாவாக ரச்சிதா மகாலட்சுமி நடிக்கிறார். விஷ்ணு சாதனாவுக்கு உதவும் பத்திரிகையாளராக நடிக்கிறார்.
தொடர் குறித்து ரட்சித மகாலட்சுமி கூறியதாவது: நியாயமான, கனிவான, தைரியமான மற்றும் விவேகமான பெண்ணாக உருவாக்கப்பட்டிருக்கும் சாதனா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு அதிக உற்சாகமளிக்கிறது. அவள் மனதில் பட்டதைப்பேச சிறிதளவும் அஞ்சாதவள், அவளது குடும்பம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றினால் எதிர்கொள்கின்ற சவால்களினால் துவண்டுவிடாது, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காத பெண்ணாக சாதனா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட ஒரு முடிவை எடுக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமையிருக்கிறது என்ற செய்தியினை வலியுறுத்திச் சொல்லும் தொடராக இது இருக்கும். என்றார்.