அடுத்தும் தமிழ் இயக்குனர் படத்தில் அல்லு அர்ஜுன்? | அஞ்சான் - ரீ ரிலீஸிலும் ஏற்பட்ட சிக்கல் | தனுஷ் 55, தயாரிப்பாளர் மாறுகிறாரா ? | ஓமர் ஷெரீப்பை மம்முட்டியாக மாற்றிய நண்பனை முதன் முறையாக மேடையேற்றிய மம்முட்டி | மீண்டும் ஒரே நாளில் வெளியாகும் அனுபமா, ரஜிஷா படங்கள் | மகேஷ்பாபு, ரவீனா டான்டன் குடும்ப வாரிசுகள் இணையும் படத்திற்கு டைட்டில் அறிவிப்பு | இப்போதைக்கு லோகா.. அடுத்து இன்னொரு படம் வரும் : பிரித்விராஜ் ஆருடம் | திரிஷ்யம் 3 மலையாளத்தில் தான் முதலில் வெளியாகும் : ஜீத்து ஜோசப் திட்டவட்டம் | பாலிவுட் நடிகருக்கு ஜோடியாகும் மீனாட்சி சவுத்ரி | நடிகர் சிவகுமாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் |

கலர்ஸ் தமிழ் சேனல் சமீபகாலமாக புத்தம் புதிய தொடர்களை ஒளிபரப்பி வருகிறது. அந்த வரிசையில் நீதிக்காக போராடும் ஒரு விதவைத் தாயின் கதையை சித்தரிக்கும் “இது சொல்ல மறந்த கதை” என்ற தொடரை இன்று (மார்ச் 7) முதல் ஒளிபரப்புகிறது. திங்கள் முதல் சனிக்கிழமை வரை இரவு 9 மணிக்கு இதனை காணலாம்.
இரு குழந்தைகளைக் கொண்ட ஒரு இளம் விதவையான சாதனாவின் வாழ்க்கை சம்பவங்களையும் மற்றும் உயிரிழந்த அவளது கணவனின் நற்பெயரை சீரழித்த ஒரு வழக்கில் அவர் தவறு செய்யாத நிரபராதி என்பதை நிரூபிப்பதற்கான அவளின் போராட்டமும்தான் தொடரின் கதை. இதில் சாதனாவாக ரச்சிதா மகாலட்சுமி நடிக்கிறார். விஷ்ணு சாதனாவுக்கு உதவும் பத்திரிகையாளராக நடிக்கிறார்.
தொடர் குறித்து ரட்சித மகாலட்சுமி கூறியதாவது: நியாயமான, கனிவான, தைரியமான மற்றும் விவேகமான பெண்ணாக உருவாக்கப்பட்டிருக்கும் சாதனா என்ற கதாபாத்திரத்தில் நடிப்பது எனக்கு அதிக உற்சாகமளிக்கிறது. அவள் மனதில் பட்டதைப்பேச சிறிதளவும் அஞ்சாதவள், அவளது குடும்பம் மற்றும் சமுதாயம் ஆகியவற்றினால் எதிர்கொள்கின்ற சவால்களினால் துவண்டுவிடாது, ஒருபோதும் நம்பிக்கையை இழக்காத பெண்ணாக சாதனா கதாபாத்திரம் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. தனிப்பட்ட ஒரு முடிவை எடுக்க ஒவ்வொரு பெண்ணுக்கும் உரிமையிருக்கிறது என்ற செய்தியினை வலியுறுத்திச் சொல்லும் தொடராக இது இருக்கும். என்றார்.