ஒரே மாதத்தில் திரைக்கு வரும் கிர்த்தி ஷெட்டியின் மூன்று படங்கள் | 100 பேர் வந்தாலும்....! பிரதீப் ரங்கநாதனின் 'டியூட்' படத்தின் டிரைலர் வெளியானது! | ஆனந்த்.எல்.ராய் இயக்கத்தில் இணையும் முன்னனி நடிகைகள் | இம்மாதத்தில் ஓடிடியில் வெளியாகும் 'லோகா, இட்லிகடை' | 500 கோடி வசூலை நோக்கி 'காந்தாரா சாப்டர் 1' | அரசன் படத்தின் புதிய அப்டேட் : சுதீப் இணைய வாய்ப்பு | சிவகார்த்திகேயன் உடன் இணையும் ஸ்ரீ லீலா | பைசன் படத்தின் தணிக்கை சான்று மற்றும் ‛ரன்னிங் டைம்' | நான் அசாம், தாய்மொழி நேபாளம் : கயாடு லோகர் புது தகவல் | பாபாஜி குகையில் ரஜினி தியானம், வழிபாடு |
விஜய் டிவியில் ஒளிபரப்பாகி வரும் சீரியல்களில் ராஜா ராணி-2 முக்கிய இடத்தை பிடித்துள்ளது. சித்து மற்றும் ஆல்யா மானசா முன்னணி கதாபாத்திரங்களில் நடித்து வருகின்றனர். ஆல்யா மானசா தற்போது கர்ப்பமாக இருக்கிறார். இதனை முன்னிட்டு திரைக்கதையில் சில மாற்றங்கள் செய்யப்பட்டு அவர் தொடர்ந்து நடித்து வருகிறார். தற்போது பிரசவ காலம் நெருங்கிவிட்ட நிலையில், குறைந்தது ஒருமாத காலமாவது ஆல்யா ஓய்வுக்கு சென்றுவிடுவார். இதனால் அவர் சீரியலை விட்டு விலகுகிறாரா? எனஆல்யாவிடம் ரசிகர் ஒருவர் கேள்வி எழுப்பியுள்ளார்.
அதற்கு பதிலளித்துள்ள ஆல்யா, 'சீரியலை விட்டு விலகும் எண்ணம் எனக்கு இல்லை' என கூறியுள்ளார். இதனால், ராஜா ராணி-2ல் அவர் தொடர்ந்து ஹீரோயினாக நடிப்பார் என தெரிய வருகிறது. ஆல்யா தற்போது 7 மாதம் கர்ப்பத்துடன் சீரியலில் நடித்து வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
முன்னதாக பரீனா கரப்பமாக இருந்த காலத்தில் அவர் ஜெயிலுக்கு சென்றதாக காட்டி பாரதி கண்ணம்மா சீரியல் தொடர்ந்து ஒளிபரப்பாகி வந்தது. ஆனால், ராஜா ராணி-2வை பொறுத்தவரை ஆல்யா தான் முக்கிய கதாபாத்திரம் என்பதால் அவர் சீரியலை விட்டு விலகும் பட்சத்தில் சீரியலை தொடர்ந்து ஒளிபரப்புவது எப்படி என்ற கேள்வி எழுந்துள்ளது.