சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
சினிமாவில் ஹீரோ ஆக வேண்டும் என சென்னைக்கு வந்தவர் ஷ்யாம். ஆனால் சிரியலில் மோஸ்ட் வாண்டட் ஹீரோ பட்டியலில் இணைந்துள்ளார். புதுக்கவிதை சீரியல் மூலம் சின்னத்திரையில் என்ட்ரியான அவர் இதுவரை, களத்து வீடு, கல்யாணம் முதல் காதல் வரை, சரவணன் மீனாட்சி, பொன்னூஞ்சல், மெல்ல திறந்தது கதவு, லட்சுமி கல்யாணம், நெஞ்சம் மறப்பதில்லை, அரண்மனை கிளி, நிறம் மாறாத பூக்கள் என பல சீரியல்களில் நடித்துள்ளார்.
இந்நிலையில் அவர் தற்போது கலர்ஸ் தமிழில் புதிதாக ஒளிபரப்பாகவுள்ள 'வள்ளி திருமணம்' சீரியலில் ஹீரோவாக என்ட்ரி கொடுக்கிறார். இதில் யாரடி நீ மோகினி புகழ் நக்ஷத்திரா ஹீரோயினாக நடிக்கிறார். ஷ்யாம் பல சீரியல்களில் நடித்திருந்தாலும் அவரது கதாபாத்திரம் லீட் ரோலில் பெரிதாக அமைந்ததில்லை. இந்நிலையில் வள்ளி திருமணம் சீரியலில் அவர் ஹீரோவாக என்ட்ரி கொடுப்பதால், அவரது ரசிகர்கள் பலரும் ஷ்யாமுக்கு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.