சர்வதேச திரைப்பட விழாக்களில் பங்கேற்கும் குழந்தைகள் சினிமா | பார்க்கிங் படத்துக்கு 3 விருதுகள் : இயக்குனர், ஹீரோ, எம்.எஸ்.பாஸ்கர் நெகிழ்ச்சி | புது சாதனை படைக்குமா 'கூலி' டிரைலர் | கல்லீரல் பிரச்னையால் அவதிப்படும் தனுஷ் பட நடிகர் : கேபிஒய் பாலா ஒரு லட்சம் உதவி | ‛ஹிருதயம் லோபலா' பாடல் நீக்கம் ஏன் ? : கிங்டம் தயாரிப்பாளர் புது விளக்கம் | ஆகஸ்ட் 3 முதல் மலையாள பிக்பாஸ் சீசன்-7 துவக்கம் | போட்டியின்றி இணைச் செயலாளராக தேர்வான் ‛திரிஷ்யம்' நடிகை | 36 ஆண்டுகளுக்குப் பிறகு ரஜினி படத்திற்கு 'ஏ' சான்றிதழ் | இரண்டாவது முறை தேசிய விருது பெறும் ஊர்வசி | தேசிய விருது வென்றவர்களுக்கு கமல்ஹாசன் வாழ்த்து |
பிக்பாஸ் வீட்டில் நாட்கள் செல்ல செல்ல ஒவ்வொரு நபராக எலிமினேட் ஆகி வருகின்றனர். இதன் காரணமாக மீதமிருக்கும் நபர்களுக்கு தாங்கள் எலிமினேட் ஆகி விடுவோமோ என்ற பதற்றம் அதிகரித்துள்ளது. இதன் காரணமாக குழுக்களாக பிரிந்து சண்டைகளும் நடைபெற்று வருகிறது.
பிக்பாஸ் வீட்டின் தலைவராக இமான் அண்ணாச்சி தான் தேர்ந்தெடுக்கப்பட்டார் ஆனால், நிரூப் தனது சலுகையை பயன்படுத்தி வீட்டின் தலைவராக மாறிவிட்டார். நிரூப் தன் மனதுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று சொன்ன அண்ணாச்சி தோல்வி பயத்தால் நிரூப்பை வாயா போயா என்று பேசிவிட்டார். மேலும், 'பவரை அவங்க மிஸ் யூஸ் பண்ணுவாங்க. இதை வச்சு பழி வாங்குவாங்க' என்று இமான் அண்ணாச்சி பேசியுள்ளார். நிரூப்பின் தலைமையை ஏற்க விரும்பாத வருண் அண்ணாச்சி டீமில் சேர்ந்து ஓவர் பெர்பார்மென்ஸ் செய்கிறார்.
பிக்பாஸ் வீட்டில் எலிமினேட் ஆகாமல் இருக்க போட்டியாளர்கள் அனைவரும் தற்போது மக்களின் ஓட்டுகளையே நம்பி வருகின்றனர். எனவே அதிக ஓட்டுகளை வாங்குவதற்காக முயற்சிகளும் எடுத்து வருகின்றனர். தோல்வி பயம் ஒருவரை எந்த எல்லைக்கும் கொண்டு செல்லும் என்பது போல பிக்பாஸ் வீட்டில் ஒருவரையொருவர் மாற்றி மாற்றி குற்றம் சொல்லி வருகின்றனர். இந்த வாரம் முழுவதும் பிக்பாஸ் வீட்டில் சண்டை காட்சிகளுக்கு பஞ்சம் இருக்காது என்பது தெளிவாக தெரிகிறது.