நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை | தன் பட பூஜையை அர்ஜூன் தாஸ் புறக்கணித்தாரா? | தமிழில் மெலோடி பாடல்கள் குறைந்தது ஏன்?: கங்கை அமரன் | ஹிந்தியில் மீண்டும் தடம் பதிப்பாரா தனுஷ்? |

கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த மலையாள திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு பெரும்பாலும் பிற மொழி சினிமா கலைஞர்களை நியமித்து வருகிறது. பாரதிராஜா, கே.பாக்யராஜ், பாலச்சந்தர், மகேந்திரன் உள்ளிட்ட பலர் தலைவராக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு நடிகை சுஹாசினியை கேரள அரசு நியமித்துள்ளது. கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த கமிட்டியில் கன்னட இயக்குனர் சேஷாத்திரி, மலையாள இயக்குனர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளிதரன், இசை அமைப்பாளர் மோகன் சித்ரா, ஒளிப்பதிவாளர் ஹரிகுமார், கதாசிரியர் சசிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சுஹாசினி சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடுவராக பணியாற்றி உள்ளார்.