வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
கேரள அரசு ஆண்டுதோறும் சிறந்த மலையாள திரைப்பட கலைஞர்களுக்கு விருது வழங்கி கவுரவித்து வருகிறது. விருதுக்குரியவர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு பெரும்பாலும் பிற மொழி சினிமா கலைஞர்களை நியமித்து வருகிறது. பாரதிராஜா, கே.பாக்யராஜ், பாலச்சந்தர், மகேந்திரன் உள்ளிட்ட பலர் தலைவராக இருந்துள்ளனர்.
இந்த நிலையில் 2020ம் ஆண்டுக்கான சிறந்த கலைஞர்களை தேர்வு செய்யும் கமிட்டிக்கு நடிகை சுஹாசினியை கேரள அரசு நியமித்துள்ளது. கமிட்டி தலைவராக ஒரு நடிகை நியமிக்கப்படுவது இதுவே முதல் முறை. இந்த கமிட்டியில் கன்னட இயக்குனர் சேஷாத்திரி, மலையாள இயக்குனர் பத்ரன், ஒளிப்பதிவாளர் முரளிதரன், இசை அமைப்பாளர் மோகன் சித்ரா, ஒளிப்பதிவாளர் ஹரிகுமார், கதாசிரியர் சசிதரன் ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளார்.
நடிகை சுஹாசினி சென்னை சர்வதேச திரைப்பட விழா ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவராக பணியாற்றி வருகிறார். பல்வேறு சர்வதேச திரைப்பட விருது விழாவில் நடுவராக பணியாற்றி உள்ளார்.