சிவகார்த்திகேயனை தொடர்ந்து ராகவா லாரன்ஸூக்கு வில்லன் ஆன ரவி மோகன்! | தமிழில் ‛வானம்' படம் உருவானது எப்படி? இயக்குனர் விளக்கம்! | புதுமுகங்கள் நடித்த 'மன்னு க்யா கரேகா' டிரைலர் வெளியீடு | நடிப்பதை விட படம் தயாரிப்பதில் மகிழ்ச்சி: சிவகார்த்திகேயன் | கல்லூரி சாலை ‛ஜெய்சங்கர் சாலை' ஆனது: அரசாணை வெளியீடு | மறைந்த நடிகை ஸ்ரீதேவியின் ஈசிஆர் சொத்துக்களை அபகரிக்க முயற்சி! நீதிமன்றத்தில் வழக்கு தொடுத்த போனி கபூர்!! | விஜய் படத்திற்கு பிறகு சிவகார்த்திகேயன் படத்தில் கெஸ்ட் ரோலில் நடித்த ஏ.ஆர்.முருகதாஸ்! | விஜயகாந்தின் கனவு இரண்டே மாதத்தில் நிறைவேறும்! - விஷால் | கமல்ஹாசனை பார்ப்பது போல் இருக்கிறது; பிரேமலு நடிகருக்கு பிரியதர்ஷன் பாராட்டு | டைட்டிலில் என் பெயரையும் சேர்த்து இருக்கலாம் ; நெட்பிளிக்ஸை கிண்டலடித்த ‛ஆவேசம்' பட இசையமைப்பாளர் |
கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக 'சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் பல மொழிகளை சேர்ந்த நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் சுஹாசினி பேசியதாவது:
சினிமா துறை மற்ற துறைகளைவிட வித்தியாசமானது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடலாம். ஆனால் சினிமாவில் அப்படி போக முடியாது. 200 அல்லது 300 பேர் படப்பிடிப்புக்காக ஒரு இடத்துக்கு செல்லும்போது அங்கேயே ஒரு குடும்பமாக தங்கி இருக்க வேண்டும். விதிகளை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் அங்கே எல்லை மீறல் நிகழ்வதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில், குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். அதுவும் இல்லாமல், தற்போது புதிதாக வரும் சினிமாவுக்குள் நுழையும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவமும் இருப்பதில்லை . இதைத்தான் சிலர் தவறாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள்.
மற்ற சினிமா துறைகளைவிட, மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. காரணம், மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோகேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்திருக்க நேரிடுகிறது. இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். மலையாள திரையுலகில் இதுதான் நடக்கிறது.
தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு முடிந்தால் நான் சென்னைக்கு சென்றுவிடுவேன், தெலுங்கில் ஷூட்டிங் முடிந்தால் ஐதராபாத் சென்றுவிடுவேன். கர்நாடகாவில் என்றால் நான் பெங்களூரு சென்றுவிடுவேன். ஆனால் மலையாள சினிமாவில் ஷூட்டிங் முடிந்தால், உங்களால் வீட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாது. காரணம், அங்கே அப்படி ஒரு இடம் இல்லாததால், உங்களால் வெளியில் எங்கேயுமே செல்ல முடியாது. அதனால்தான், படப்பிடிப்பு தளங்களில் எல்லைகள் மீறப்படுகின்றன" என்றார் சுஹாசினி.