விஜய் பாணியை பின்பற்றினால் நல்லது: 'வாரிசு' தயாரிப்பாளர் தில் ராஜூ | விரைவில் 'லக்கி பாஸ்கர் 2': வெங்கி அட்லூரி அப்டேட் | கூலி திரைப்படம் ஐமேக்ஸில் வெளியாவதில் புதிய சிக்கல்? | காமெடி நடிகரின் சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சைக்கு 50 லட்சம் தர பிரபாஸ் வாக்குறுதி | படம் என்ன ஜானர் என்று ரிலீஸுக்கு முன்பே சொல்லிவிடுங்கள் ; சசிகுமார் வேண்டுகோள் | 'தொடரும்' கெட்டப்பில் புரோமோ வீடியோவுடன் பிக்பாஸ் சீசன் 7 அறிவிப்பை வெளியிட்ட மோகன்லால் | இன்ஸ்டாகிராமில் அனைத்து பதிவுகளையும் மொத்தமாக நீக்கிய ரன்வீர் சிங் ; ரசிகர்கள் கவலை | சூர்யா பிறந்தநாளில் ரீ ரிலீஸ் ஆகும் தெலுங்கு 'அயன்' | அசோக் செல்வன் புதிய பட அப்டேட்! | 'பையா' பட தெலுங்கில் ரீ ரிலீஸ் ஆகிறது! |
கோவாவில் தற்போது சர்வதேச திரைப்பட விழா நடந்து வருகிறது. இந்த விழாவின் ஒரு பகுதியாக 'சினிமாவில் பெண்கள் பாதுகாப்பு' என்ற தலைப்பில் கருத்தரங்கு நடந்தது. இதில் பல மொழிகளை சேர்ந்த நடிகைகள், இயக்குனர்கள் கலந்து கொண்டனர். இந்த கருத்தரங்கில் சுஹாசினி பேசியதாவது:
சினிமா துறை மற்ற துறைகளைவிட வித்தியாசமானது. மற்ற துறைகளில் நீங்கள் வேலை முடிந்ததும் வீட்டுக்கு சென்றுவிடலாம். ஆனால் சினிமாவில் அப்படி போக முடியாது. 200 அல்லது 300 பேர் படப்பிடிப்புக்காக ஒரு இடத்துக்கு செல்லும்போது அங்கேயே ஒரு குடும்பமாக தங்கி இருக்க வேண்டும். விதிகளை கடைபிடிக்காமல் இருக்கும் பட்சத்தில் அங்கே எல்லை மீறல் நிகழ்வதற்கு அதிக சாத்தியங்கள் உண்டு. 200 பேர் கொண்ட ஒரு படக்குழுவில், குடும்பத்தை விட்டு தனியாக இருப்பவர்கள் மீது சிலர் அட்வான்டேஜ் எடுத்துக் கொள்வார்கள். அதுவும் இல்லாமல், தற்போது புதிதாக வரும் சினிமாவுக்குள் நுழையும் இளைஞர்களுக்கு போதுமான அனுபவமும் இருப்பதில்லை . இதைத்தான் சிலர் தவறாக பயன்படுத்தி கொள்ள நினைக்கிறார்கள்.
மற்ற சினிமா துறைகளைவிட, மலையாள திரையுலகில் பெண்களுக்கு பாதுகாப்பு குறைவு. காரணம், மலையாள படங்கள் பெரும்பாலும் வெவ்வேறு லோகேஷன்களில் எடுக்கப்படுகின்றன. இதனால் நடிகைகள் மாதக்கணக்கில் தங்கள் வீட்டை விட்டு பிரிந்திருக்க நேரிடுகிறது. இதனால் அவர்களிடம் தவறாக நடந்துகொள்கிறார்கள். மலையாள திரையுலகில் இதுதான் நடக்கிறது.
தமிழ் சினிமாவில் படப்பிடிப்பு முடிந்தால் நான் சென்னைக்கு சென்றுவிடுவேன், தெலுங்கில் ஷூட்டிங் முடிந்தால் ஐதராபாத் சென்றுவிடுவேன். கர்நாடகாவில் என்றால் நான் பெங்களூரு சென்றுவிடுவேன். ஆனால் மலையாள சினிமாவில் ஷூட்டிங் முடிந்தால், உங்களால் வீட்டுக்கு திரும்பிச் செல்ல முடியாது. காரணம், அங்கே அப்படி ஒரு இடம் இல்லாததால், உங்களால் வெளியில் எங்கேயுமே செல்ல முடியாது. அதனால்தான், படப்பிடிப்பு தளங்களில் எல்லைகள் மீறப்படுகின்றன" என்றார் சுஹாசினி.