வன்முறை, ரத்தம் தெறிக்கும் காட்சிகள் : ரஜினியின் 'கூலி' படத்திற்கு ‛ஏ' சான்று | பிரதீப் ரங்கநாதன் பாணியில் அபிஷன் ஜீவிந்த் நாளை மறுநாள் ஹீரோ ஆகிறார் | பிட்னஸ் ரகசியத்தை வெளியிட்ட சமந்தா | ஜெயிலர் 2 படப்பிடிப்பு : மீண்டும் கேரளா செல்லும் ரஜினி | 3 விருதுகளை வென்ற ‛பார்க்கிங்' : ஷாரூக்கான், ராணி முகர்ஜி, ஜிவி பிரகாஷிற்கு தேசிய விருது | ஒரே நாளில் இரண்டு இலங்கைத் தமிழ் ஹீரோக்களின் படங்கள் ரிலீஸ் | அமெரிக்காவில் ஜேசுதாஸை சந்தித்த ஏஆர் ரஹ்மான் | டிரண்டாகும் மதராஸி படத்தின் சலம்பல பாடல் | கூலியால் தள்ளிப்போன எல்ஐகே பட அறிவிப்பு | மோகன்லால் பட இயக்குனரின் படத்தில் நடிக்கும் கார்த்தி |
தடை செய்யப்பட்ட டிக் டாக் செயலி மூலம் ஆபாச நடன வீடியோக்கள் வெளியிட்டு புகழ்பெற்றவர் இலக்கியா. இதற்கு முன்பு அவர் சில படங்களில் சிறிய கேரக்டர்களில் நடித்திருந்தாலும் முழுமையான ஹீரோயினாக நடித்திருக்கும் படம் நீ சுடத்தான் வந்தியா. இப்படத்தைத் தயாரித்ததுடன் கதாநாயகனாகவும் நடித்திருக்கிறார் அருண்குமார். துரைராஜ் இயக்கி உள்ளார்.
இப்படத்தைப் 4 பேர் கொண்ட தணிக்கை குழுவினர் பார்த்தனர். அவர்களால் முடிவெடுக்க முடியாததால் அதன் பிறகு 8 பேர் கொண்ட குழுவுக்கு அனுப்பப்பட்டது. இறுதியில் படத்திற்கு ஏ சான்றிதழ் வழங்கியுள்ளனர்.
இலக்கியா கூறியிருப்பதாவது: இந்தப் படத்தில் நடித்துப் பார்த்தபோதுதான் சினிமா எவ்வளவு சிரமம் என்பதைத் தெரிந்து கொண்டேன் .சினிமாவில் நடிக்க வேண்டும் என்பதுதான் என் கனவு. அது இப்போது நிறைவேறி இருக்கிறது. மேலும் நல்ல நல்ல படங்களில் நடிக்க வேண்டும் என்று ஆசை இருக்கிறது . படக் குழுவில் இயக்குநர் சொல்லிக் கொடுத்தார். பலரும் நடிப்பு அனுபவம் இல்லாத என்னைப் புரிந்து கொண்டு உதவினார்கள். ஒருவழியாக மெல்ல மெல்ல நம்பிக்கை வந்து நடிக்க ஆரம்பித்தேன். என்றார்.