எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி | இன்னும் 50 நாள் : பராசக்தி புதிய போஸ்டர் வெளியீடு | ஆர்யன் படம் வருகிற 28-ல் நெட்பிளிக்சில் வெளியாகிறது | ஜாய் கிறிஸ்டில்லாவுக்கு எதிராக மாதம்பட்டி ரங்கராஜ் தொடுத்த வழக்கை தள்ளுபடி செய்த நீதிமன்றம் | சிம்பு கதையில் ரஜினியா... | ஆண் பாவம் பொல்லாதது-க்கு பின் தமிழ் சினிமா நிலைமை பாவம் | அது நானில்லை : ரகுல் ப்ரீத் சிங் எச்சரிக்கை |

கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருமாலின் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். இப்போது அடுத்தடுத்து செல்கிறார்கள்.
தெலுங்கு இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜ், நடிகை நயன்தாரா, அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினியின் மகள்கள், நடிகை சமந்தா உள்ளிட்ட பல செலிபிரிட்டிகள் சமீபத்தில் திருப்பதி சென்றார்கள். இந்த நிலையில் நடிகர் பிரபு தனது மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து சீக்கிரம் அனைத்து மக்களும் விடுபட வேண்டும், அப்படி நடக்கும் பட்சத்தில் திருப்பதி வந்து வழிபடுவதாக வேண்டி இருந்தேன். கொரோனா சூழ்நிலை விலகி வருவதால் வேண்டுதலை நிறைவேற்ற வந்தேன். என்றார்.