மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
கொரோனா ஊரடங்கிற்கு பிறகு திருப்பதி ஏழுமலையான் கோவில் பக்தர்களுக்காக திறக்கப்பட்டுள்ளது. இதனால் திருமாலின் பக்தர்கள் கோவிலுக்கு செல்ல முடியாமல் தவித்தார்கள். இப்போது அடுத்தடுத்து செல்கிறார்கள்.
தெலுங்கு இயக்குனர் வம்சி, தயாரிப்பாளர் தில்ராஜ், நடிகை நயன்தாரா, அவரது காதலர் இயக்குனர் விக்னேஷ் சிவன், ரஜினியின் மகள்கள், நடிகை சமந்தா உள்ளிட்ட பல செலிபிரிட்டிகள் சமீபத்தில் திருப்பதி சென்றார்கள். இந்த நிலையில் நடிகர் பிரபு தனது மகன் நடிகர் விக்ரம் பிரபு உள்ளிட்ட குடும்பத்தினருடன் திருப்பதி சென்று ஏழுமலையானை வழிபட்டார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், கொரோனாவில் இருந்து சீக்கிரம் அனைத்து மக்களும் விடுபட வேண்டும், அப்படி நடக்கும் பட்சத்தில் திருப்பதி வந்து வழிபடுவதாக வேண்டி இருந்தேன். கொரோனா சூழ்நிலை விலகி வருவதால் வேண்டுதலை நிறைவேற்ற வந்தேன். என்றார்.