பான் இந்தியா ஹீரோயின் ஆக மாறும் ருக்மணி வசந்த் | விஜய் மீண்டும் நடிக்க வருவார் : அனலி ஹீரோயின் ஆருடம் | டொவினோ தாமஸின் படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிக்கும் பிரித்விராஜ் | 'சேவ் பாக்ஸ்' மோசடி வழக்கு ; அமலாக்கத்துறை விசாரணைக்கு ஆஜரான நடிகர் ஜெயசூர்யா | பிளாஷ்பேக்: படப்பிடிப்பு முடியும் முன்பே பலியான “பத்ரகாளி” பட நாயகி ராணி சந்திரா | சிறுத்தையின் கர்ஜனையால் தெறித்து ஓடிய நடிகை மவுனி ராய் | அண்ணனின் திருமண நாளிலேயே தனது திருமணத்திற்கு தேதி குறித்த அல்லு சிரிஷ் | 'திரிஷ்யம்-3'யில் அக்ஷய் கண்ணாவுக்கு பதிலாக நடிக்கும் விஸ்வரூபம் நடிகர் | புறநானூறு படத்திலிருந்து சூர்யா விலகியது ஏன்? : சுதா கொங்கரா பதில் | அரசியலுக்கு வந்தால் சாதிக்கு எதிரான கட்சி தொடங்குவேன் : மாரி செல்வராஜ் |

சமந்தாவும், நாகசைதன்யாவும் பிரிந்து வாழ்ந்து வருவதாக ஏற்கனவே செய்திகள் வெளியாகி வருகின்றன. தற்போது அவர்கள் விவகாரத்திற்காக நீதிமன்றத்திற்கு செல்ல தயாராகிக் கொண்டிருப்பதாகவும் சோசியல் மீடியாக்களில் பரபரப்பு செய்திகள் வெளியாகிக் கொண்டிருக்கின்றன. இதுபோன்ற செய்திகளுக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் ஒரு பேட்டியில் நாகசைதன்யா பதிலளித்திருந்தபோதும் சமந்தா மட்டும் இன்னமும் அமைதி காத்து வருகிறார்.
இந்தநிலையில், தற்போது தனது இன்ஸ்டாகிராமில் தான் வளர்த்து வரும் இரண்டு செல்ல நாய்க்குட்டிகளின் புகைப்படத்தை வெளியிட்டுள்ளார் சமந்தா. ஹாஷி- ஷாஷா என்று பெயரிடப்பட்டுள்ள அந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதாக தெரிவித்துள்ள சமந்தா, இத்தனை சீக்கிரம் இந்த இரண்டு நாய்களும் நன்றாக பழகி சேர்ந்து இருக்கும் என நான் நினைக்கவில்லை. இந்த இரண்டு நாய்களும் சகோதர பாசத்துடன் பழகி வருவதே எனக்கு கிடைத்த ஆசீர்வாதம் என்று நினைக்கிறேன். அதோடு, இந்த இரண்டு நாய்களுமே ஒவ்வொரு நாளும் எனக்கு ஏதாவது புதிய விசயங்களை கற்றுக்கொடுத்து வருகின்றன என்றும் தெரிவித்துள்ளார் சமந்தா.