ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! | ஹீரோயின்களுக்கு முக்கியத்தும் உள்ள கேங்ஸ்டர் கதையை எழுதுங்கள் : கார்த்திக் சுப்பராஜிற்கு பூஜா வேண்டுகோள் | போய் வா நண்பா…ஒரு நாளில் ஒரு மில்லியன்… | கேங்கர்ஸ் Vs சுமோ - ரசிகர்கள் ஆதரவு யாருக்கு? | 'குட் பேட் அக்லி' வினியோகஸ்தருக்கே 'ஜனநாயகன்' வினியோக உரிமை? | பிளாஷ்பேக்: விஜயகாந்த் ஜோடியாக நடித்த அனுராதா | பிளாஷ்பேக்: இரட்டை சகோதரிகளாக நடித்த மாதுரி தேவி | ''பணம் கொட்டிக்கிடக்கு... எங்களுக்கு பணத்தாசை இல்லை'': ராயல்டி விவகாரத்தில் கங்கை அமரன் 'பளீச்' | புற்றுநோய் பாதிப்பு: உதவி கேட்கும் சூப்பர்குட் சுப்பிரமணி | தேங்கி கிடந்த 'சுமோ' ஏப்., 25ம் தேதி திரைக்கு வருகிறார் |
தமிழ் சினிமாவில் எம்ஜிஆர், சிவாஜி காலகட்டத்தில் மிகப் பிரபலமான நடிகர்களில் ஜெய்சங்கரும் ஒருவர். இவர் பெரும்பாலும் படங்களில் அதிரடி சண்டை காட்சிகள், துப்பறியும் அதிகாரி, சிபிஐ ஆபிசர் போன்ற வேடங்களில் நடித்திருப்பார். எனவே இவரை தென்னிந்தியாவின் ஜேம்ஸ்பாண்ட் என்றும் ரசிகர்கள் அழைத்து வந்தார்கள்.
ஜெய்சங்கருக்கு இரண்டு மகன்கள் உள்ளார்கள். மூத்த மகன் விஜய் சங்கர். இவர் கண் மருத்துவராக உள்ளார். இளைய மகன் சஞ்சய் சங்கர். இவர் நிறுவனம் ஒன்றை வருகிறார். சஞ்சய் சங்கர் இசை என்ற படத்தில் நடித்ததன் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானார்.
இவர் தற்போது சின்னத்திரையில் ஒளிபரப்பாகி வரும் தொடர்களில் நடிக்க தொடங்கியுள்ளார். தொழிலதிபர் ராஜசேகர் என்ற கதாபாத்திரத்தில் நடித்து கொண்டிருக்கிறார். விஜய் டிவியில் ஒளிபரப்பாகி மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்று வரும் தொடர்களில் பாக்கியலட்சுமி சீரியலும் ஒன்று என்பது குறிப்பிடத்தக்கது.