பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
மணிரத்னம் இயக்கத்தில் விக்ரம், கார்த்தி, ஜெயம் ரவி, திரிஷா, ஐஸ்வர்யா ராய் மற்றும் பலர் நடிக்கும் பொன்னியின் செல்வன் படத்தின் இறுதிக்கட்ட படப்பிடிப்பு பரபரப்பாக நடந்து வருகிறது. தற்போது படத்தின் படப்பிடிப்பு மைசூரில் நடந்து வருகிறது. அங்கு படத்திற்கான முக்கிய பாடல் காட்சி ஒன்று படமாகி வருகிறது. அதில் கார்த்தி கலந்து கொண்டு நடித்தார். இதோடு இவர் சம்பந்தப்பட்ட படப்பிடிப்பு முடிந்துவிட்டது.
ஏற்கனவே இப்படத்திற்கான தங்களது படப்பிடிப்பை ஜெயம் ரவி, விக்ரம், ஐஸ்வர்யா ராய் உள்ளிட்டவர்கள் முடித்தார்கள். அவர்களை தொடர்ந்து தற்போது கார்த்தியும் தன்னுடைய படப்பிடிப்பை முடித்துக் கொண்டுள்ளார்.
இதுகுறித்து கார்த்தி டுவிட்டரில் பதிவிட்டுள்ளதாவது : இளவரசி த்ரிஷா நீங்கள் இட்ட ஆணை நிறைவேற்றப்பட்டது. இளவரசேசசசசச ஜெயம் ரவி என் பணியும் முடிந்தது'' என படத்தில் குந்தவை ஆக நடிக்கும் த்ரிஷாவையும், அருள்மொழி வர்மன் ஆக நடிக்கும் ஜெயம் ரவியையும் டேக் செய்து குறிப்பிட்டுள்ளார்.
இன்னும் சில நாட்களில் பொன்னியின் செல்வன் படத்தின் முழு படப்பிடிப்பும் நிறைவடையும் என தெரிகிறது. விரைவில் இப்படத்தின் முதல் பார்வை போஸ்டர், மற்ற விவரங்கள் வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.