லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
வடநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்தபிறகு அச்சு அசலான தமிழ்நாட்டு மருமகளாக மாறிவிட்டவர். இப்போது இருவருமே முழுநேர விவசாயி ஆகி இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.
இங்கு அவர்களுக்கு ஒரு பண்ணை வீடும், அதை சுற்றி 5 ஏக்கரில் விவசாய நிலமும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தின் போது குடும்பத்துடன் அங்கு சென்று செட்டிலாகிவிட்டவர்களுக்கு அந்த ஊரும், விவசாயமும் பிடித்து விட அங்கேயே நிரந்தரமாக குடியேறவும் முடிவு செய்து விட்டார்கள். என்றாலும் மகள்களின் படிப்பு. சீரியல் நடிப்பு இவற்றின் காரணமாக இங்கும், அங்குமாக மாறி மாறி வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்களது விவசாய நிலத்தின் அருகே ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 2 ஏக்கர் விவசாய நிலத்தை பிளாட்டுகளாக விற்பனை செய்ய விளம்பரம் செய்து வந்தது. இதையறிந்த தேவயானி அந்த நிறுவனத்திடமிருந்து 2 ஏக்கர் நிலத்தையும் வாங்கி அதை விவசாய நிலமாக மாற்றி உள்ளார். அதில் தற்போது செண்டு மல்லி பயிரிட்டுள்ளார்.
இயற்கை விவசாயியாக மாறியதுடன் வீட்டுமனையாக இருந்த விளைநிலத்தை மீட்டு அதில் விவசாயம் செய்யும் தேவயானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.