மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
வடநாட்டில் பிறந்து வளர்ந்தாலும் நடிகை தேவயானி இயக்குனர் ராஜகுமாரனை திருமணம் செய்தபிறகு அச்சு அசலான தமிழ்நாட்டு மருமகளாக மாறிவிட்டவர். இப்போது இருவருமே முழுநேர விவசாயி ஆகி இருக்கிறார்கள். ஈரோடு மாவட்டத்தில் ராஜகுமாரனின் சொந்த ஊருக்கு அருகேயுள்ள எண்ணமங்கலம் கிராமத்தில் இயற்கை விவசாயம் செய்து வருகிறார்கள்.
இங்கு அவர்களுக்கு ஒரு பண்ணை வீடும், அதை சுற்றி 5 ஏக்கரில் விவசாய நிலமும் உள்ளது. கொரோனா ஊரடங்கு காலத்தின் போது குடும்பத்துடன் அங்கு சென்று செட்டிலாகிவிட்டவர்களுக்கு அந்த ஊரும், விவசாயமும் பிடித்து விட அங்கேயே நிரந்தரமாக குடியேறவும் முடிவு செய்து விட்டார்கள். என்றாலும் மகள்களின் படிப்பு. சீரியல் நடிப்பு இவற்றின் காரணமாக இங்கும், அங்குமாக மாறி மாறி வசித்து வருகிறார்கள்.
இந்நிலையில் இவர்களது விவசாய நிலத்தின் அருகே ஒரு ரியல் எஸ்டேட் நிறுவனம் 2 ஏக்கர் விவசாய நிலத்தை பிளாட்டுகளாக விற்பனை செய்ய விளம்பரம் செய்து வந்தது. இதையறிந்த தேவயானி அந்த நிறுவனத்திடமிருந்து 2 ஏக்கர் நிலத்தையும் வாங்கி அதை விவசாய நிலமாக மாற்றி உள்ளார். அதில் தற்போது செண்டு மல்லி பயிரிட்டுள்ளார்.
இயற்கை விவசாயியாக மாறியதுடன் வீட்டுமனையாக இருந்த விளைநிலத்தை மீட்டு அதில் விவசாயம் செய்யும் தேவயானிக்கு பாராட்டுகள் குவிந்து வருகிறது.