லாயராக அதுல்யா ரவி, மீனவனாக நான் : டீசல் ரகசியம் சொல்லும் ஹரிஷ் கல்யாண் | காதல், நகைச்சுவை கதைகளில் நடிக்க ஆர்வமாக இருக்கும் ருக்மணி வசந்த் | விண்வெளியில் நான்காவது திருமணம் செய்கிறாரா ஹாலிவுட் நடிகர் டாம் குரூஸ் | அஜித் 64வது படத்தின் அறிவிப்பு எப்போது? : ஆதிக் ரவிச்சந்திரன் தகவல் | ஓடிடிக்கு வருகிறது லோகா சாப்டர் 1 | டியூட் படத்தில் பிரதீப் பாடிய ‛சிங்காரி' பாடல் வெளியானது | தனுஷ் படத்தின் நாயகி யார்... நீடிக்கும் குழப்பம்? | ஜீவா, ராஜேஷ் படத்தில் இணையும் ரம்யா ரங்கநாதன் | ‛பேராண்டி' படத்தில் மனோரமா பாடிய கடைசி பாடல் | 'பைசன்' என் முதல் படம் மாதிரி: துருவ் விக்ரம் |
அருண் விஜய் நடித்த குற்றம் 23 படத்தை இயக்கிய அறிவழகன் மீண்டும் அவரை வைத்து இயக்கி வரும் படம் பார்டர். ரெஜினா ஹீரோயின். ராஜசேகர் ஒளிப்பதிவு செய்கிறார், சாம் சி.எஸ் இசை அமைக்கிறார். தற்போது இப்படத்தின் இறுதிக்கட்ட பணிகள் முடிந்து ரிலீசுக்கு தயாராக உள்ளது. இந்த நிலையில் பார்டர் படத்தை வெளியிட தடை கேட்டு டோனி சினிமாஸ் நிறுவனத்தின் சார்பில் தயாரிப்பாளர் சார்லஸ் ஆண்டனி சாம், சென்னை உரிமையியல் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார்.
அவர் தாக்கல் செய்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: பார்டர் என்ற தலைப்பில் நான் படம் ஒன்றை தயாரித்துள்ளேன். இந்தப் படத்தின் தலைப்பை ஏற்கனவே முறைப்படி பதிவு செய்துள்ளேன். ஆனால் அருண் விஜய்யின் நடிப்பில் தற்போது பார்டர் என்ற பெயரில் ஒரு திரைப்படம் உருவாகியுள்ளதை கேட்டு அதிர்ச்சி அடைந்தேன்.
இந்த படம் வெளியானால் எனக்கு மிகப் பெரிய இழப்பு ஏற்படும். எனவே அருண் விஜய்யின் பார்டர் படம் வெளியாவதற்கு தடை விதிக்க வேண்டும்.என்று அந்த மனுவில் குறிப்பிட்டிருக்கிறார்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் பார்டர் படத்தின் தயாரிப்பாளர் விஜய் ராகவேந்திரா, தணிக்கை குழு, டைட்டிலை பதிவு செய்த தயாரிப்பாளர் சங்கம் ஆகியவற்றுக்கு விளக்கம் கேட்டு நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டது.