புஷ்பா 2, ஸ்த்ரீ 2-க்குப் பிறகு சாதனை வசூலில் 'சாவா' | சூர்யா 46வது படத்தின் பணி துவங்கியது | கன்னட சினிமாவில் அறிமுகமாகும் பூஜா ஹெக்டே | திருமணத்திற்கு பிறகு வாழ்க்கை எப்படி உள்ளது? தொகுப்பாளினி பிரியங்கா சொன்ன பதில் | மூன்று நாட்களில் விஜய்யின் 'சச்சின்' படம் செய்த வசூல் சாதனை! | இந்த வாரம் 'ராமாயணா' படப்பிடிப்பில் கலந்து கொள்ளும் யஷ்! | மஹாராஷ்டிரா கோலாப்பூரில் உள்ள மகாலஷ்மி கோவிலில் சாமி தரிசனம் செய்த சூர்யா - ஜோதிகா! | உங்களை நீங்களே பாராட்டிக் கொள்ளுங்கள்! - ரோஜா பூ உடன் ராஷ்மிகா வெளியிட்ட பதிவு | இரண்டாவது முறையாக ஜோடி சேரும் நிதின், கீர்த்தி சுரேஷ் | ஊர்மிளாவுக்கு 50 வயது மாதிரியா தெரிகிறது… !! |
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் பா. ரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசினார். ராஜராஜ சோழன் ஒரு அயோக்கியன் அவன் ஆட்சி காலத்தில் தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவன் ஆட்சி காலம் இருண்ட காலம். அவன் ஆட்சிக் காலத்தில்தான் டெல்டா பகுதியில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது. என்று பேசினார்.
பா. ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது . இது குறித்து பலரும் போலீசில் புகார் அளித்தனர். பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்ட குறிப்புகளையே தான் பேசியதாகவும், இதே கருத்தை பலரும் பேசி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு விளக்கமும் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.