மதராஸி ‛கம்பேக்' கொடுக்கும் படமாக இருக்கும் என்கிறார் ஏ.ஆர்.முருகதாஸ் | 'ஏஸ்' தோல்வியிலிருந்து ஏறி வந்த விஜய் சேதுபதி | ரசிகர்களை அதிர்ச்சியடைய வைத்த மாதம்பட்டி ரங்கராஜ் இரண்டாவது திருமணம் | வாடகை வீட்டில் வசிப்பது ஏன் ? பாலிவுட் நடிகர் அனுபம் கெர் ஆச்சரிய விளக்கம் | அஜித்தை வைத்து ஆக்ஷன் படம் இயக்க லோகேஷ் கனகராஜ் ஆசை | ராஷ்மிகாவின் மைசா படப்பிடிப்பு பூஜையுடன் தொடங்கியது | பிளாஷ்பேக் : வரிசை கட்டிவந்த யுத்த பிரச்சாரத் திரைப்படங்கள் | அருண் மாதேஸ்வரன் இயக்கத்தில் நடிப்பதை உறுதி செய்த லோகேஷ் கனகராஜ் | வெற்றிமாறன், சிம்பு படத்தின் புதிய அப்டேட் | ஆகஸ்ட் 1ல் பல படங்கள் போட்டி.. |
கும்பகோணம் அருகே உள்ள திருப்பனந்தாளில் நடந்த விழா ஒன்றில் இயக்குனர் பா. ரஞ்சித், மன்னர் ராஜராஜ சோழனை பற்றி அவதூறாக பேசினார். ராஜராஜ சோழன் ஒரு அயோக்கியன் அவன் ஆட்சி காலத்தில் தான் தலித் மக்களின் நிலம் அத்தனையும் பறிக்கப்பட்டது. ராஜராஜ சோழன் காலம் தான் பொற்காலம் என்கிறார்கள். ஆனால் அவன் ஆட்சி காலம் இருண்ட காலம். அவன் ஆட்சிக் காலத்தில்தான் டெல்டா பகுதியில் சாதியக் கொடுமைகள் அதிகமாக நடைபெற்றது. என்று பேசினார்.
பா. ரஞ்சித்தின் இந்த பேச்சு சர்ச்சையை ஏற்படுத்தியது . இது குறித்து பலரும் போலீசில் புகார் அளித்தனர். பா.ரஞ்சித் மீது திருப்பனந்தாள் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்தனர். இந்த வழக்கு மதுரை உயர்நீதிமன்ற கிளையில் நடந்து வருகிறது. பா.ரஞ்சித் தாக்கல் செய்த மனுவில், வரலாற்று புத்தகங்களில் எழுதப்பட்ட குறிப்புகளையே தான் பேசியதாகவும், இதே கருத்தை பலரும் பேசி இருப்பதாகவும் தெரிவித்திருந்தார்.
இந்த வழக்கு மீண்டும் விசாரணைக்கு வந்தது. இதில் இரு தரப்பு விளக்கமும் நீதிமன்றத்திடம் அளிக்கப்பட்டது. தொடர்ந்து வழக்கின் இறுதி விசாரணையை வருகிற 28ந் தேதிக்கு தள்ளிவைத்து நீதிமன்றம் உத்தரவிட்டது.