'மதராஸி' படத்தின் முதல் பாடல் எப்போது? | அனுஷ்கா உடன் மோதும் ராஷ்மிகா! | சூர்யாவின் 50வது பிறந்த நாளில் வெளியாகும் 'கருப்பு' படத்தின் டீசர்! | விஜய் சேதுபதியின் 'தலைவன் தலைவி' டிரைலர் வெளியானது! | சிவகார்த்திகேயன் - வெங்கட்பிரபு இணையும் படம் அக்டோபரில் தொடங்குகிறது! | ரஜினி, மோகன்லால் பாணியில் கமலும்... | ஜனாதிபதி மாளிகையில் திரையிடப்பட்ட ‛கண்ணப்பா' | பணி இரண்டாம் பாக டைட்டிலை அறிவித்த ஜோஜூ ஜார்ஜ் | நடிகர் கிங்காங் வீட்டிற்கே சென்று மணமக்களை வாழ்த்திய சிவகார்த்திகேயன் | டெங்கு காய்ச்சல் : மருத்துவமனையில் விஜய் தேவரகொண்டா அனுமதி |
போதை பொருள் வழக்கில் கைது செய்யப்பட்டு சிறைக்கு சென்றவர் சஞ்சான கல்ராணி. தமிழில் நடிக்கும் நிக்கி கல்ராணியின் சகோதரி. தற்போது ஜாமினில் விடுதலையாகி உள்ள சஞ்சனா கல்ராணி நடிப்பில் தீவிரமாக இறங்கி உள்ளார்.
கன்னடம் மற்றும் தெலுங்கு படங்களில் நடித்து வந்த சஞ்சனா கல்ராணி தற்போது மலையாளத்தின் பக்கமும் கவனம் செலுத்துகிறார். மோகன்லால் நடிக்கும் ஆராட்டு படத்தில் சிறிய கேரக்டரில் நடிக்கும் சஞ்சனா கல்ராணி, டாக்டர் பிரவீன் ராணா நடிக்கும் படத்தில் ஹீரோயினாக நடிக்கிறார்.
இதுகுறித்து சஞ்சனா கூறியிருப்பதாவது: கடவுள் ஒரு கதவை மூடும்போது இன்னொரு கதவை திறப்பார் என்பார்கள். என் விஷயத்தில் அது மிகவும் உண்மை. கடந்த ஆண்டு நிறைய கதவுகளை மூடினார். இப்போது நிறைய கதவுகளை திறக்கிறார். வாழ்க்கையின் இருண்ட பகுதியை பார்த்துவிட்டேன். அதனால் நான் பயந்துவிடவில்லை. முன்பை விட தன்னம்பிக்கையோடு இருக்கிறேன். கடவுளிடம் இருந்து எனக்கு நியாய தீர்ப்பு கிடைக்கும். என்கிறார்.