பிராமணர்கள் குறித்து அவதுாறு கருத்து: மன்னிப்பு கேட்டார் 'மஹாராஜா' நடிகர் | சினிமாவை வாழ விடுங்கள்: நடிகை விஜயசாந்தி | 'கங்குவா' டிரைலரில் பாதி பார்வைகள் பெற்ற 'ரெட்ரோ' டிரைலர் | வரதட்சணை வாங்கி திருமணம் செய்து கொண்டேனா? ரம்யா பாண்டியன் கொடுத்த விளக்கம் | சிவப்பு நிறத்தில் புதிய கார் வாங்கிய ஏ. ஆர். ரஹ்மான்! | ‛போய் வா நண்பா': ‛குபேரா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது! | இன்று திருமணம் செய்து கொண்ட பிக்பாஸ் காதல் ஜோடி அமீர்- பாவனி ! | காலேஜ் ரவுடியாக நடிக்கும் சிம்பு! | 'ஜிங்குச்சா' - இரண்டு நாளில் இருபது மில்லியன் | தனது இயக்குனர்களுக்காக ஒரு அறிக்கை வெளியிடுவாரா அஜித்குமார்? |
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே.
இதையடுத்து மேலும் பல தமிழ் படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டே அரைக்கால் சட்டையுடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இதற்கிடையில் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் என்ற பிரம்மாண்ட படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
விஜய்யுடன் நடிக்கும் அனுபவம் பற்றி அவர் கூறியதாவது, விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர். சென்னையில் மழை காரணமாக விரைவாகவே படப்பிடிப்பை முடிக்க வேண்டியிருந்தது. எனக்கு மும்பை திரும்பிச் சென்றது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. என்னை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியது போல இருந்தது. எனக்கு ஆக்ஷன் ரோல்களில் நடிக்க ஆசை" என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.