சிம்பு நடிக்க இருந்த படத்தில் ரஜினியா? | மகனுக்கு அன்பு முத்தம் கொடுக்கும் நயன்தாரா! லைக்ஸ்களை அள்ளும் புகைப்படம்!! | பாடகி சுசித்ரா மீது கொச்சின் போலீசில் புகார்! | இன்ஸ்டா கணக்கை மீட்டெடுத்த ஜெயம் ரவி | திருவருள், மன்மதன், கொம்பன் - ஞாயிறு திரைப்படங்கள் | மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் |
நடிகை பூஜா ஹெக்டே தற்போது தமிழ், தெலுங்கு மற்றும் இந்தி மொழிகளில் முன்னணி நடிகையாக உருவெடுத்துள்ளார். பூஜா ஹெக்டே தமிழில் 2012-ம் ஆண்டு மிஷ்கின் இயக்கத்தில் நடிப்பில் வெளியான முகமூடி படத்தின் மூலம் தான் சினிமாவில் அறிமுகமானார். அதையடுத்து தெலுங்கு மற்றும் இந்தியில் பிரபலமானார். தற்போது நெல்சன் திலீப்குமார் இயக்கத்தில் விஜய் கதாநாயகனாக நடிக்கும் பீஸ்ட் படத்தில் பூஜா ஹெக்டே கதாநாயகியாக நடித்து வருகிறார். இந்தப் படத்தின் மூலம் 9 ஆண்டுகள் கழித்து மீண்டும் தமிழில் என்ட்ரி கொடுக்கிறார் பூஜா ஹெக்டே.
இதையடுத்து மேலும் பல தமிழ் படங்களில் நடிக்கலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தற்போது பூஜா ஹெக்டே அரைக்கால் சட்டையுடன் வலம் வரும் புகைப்படங்கள் இணையத்தைக் கலக்கி வருகின்றன. இதற்கிடையில் பிரபாஸ் உடன் ராதே ஷ்யாம் என்ற பிரம்மாண்ட படத்திலும் நடித்து முடித்துள்ளார்.
விஜய்யுடன் நடிக்கும் அனுபவம் பற்றி அவர் கூறியதாவது, விஜய் மிகவும் கூலான ஒரு மனிதர். சென்னையில் மழை காரணமாக விரைவாகவே படப்பிடிப்பை முடிக்க வேண்டியிருந்தது. எனக்கு மும்பை திரும்பிச் சென்றது மிகுந்த ஏமாற்றமாக இருந்தது. என்னை முன்கூட்டியே வீட்டுக்கு அனுப்பியது போல இருந்தது. எனக்கு ஆக்ஷன் ரோல்களில் நடிக்க ஆசை" என பூஜா ஹெக்டே தெரிவித்துள்ளார்.