காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
தற்போது பூஜா ஹெக்டேவின் கைவசம் ஆச்சார்யா, ராதே ஷ்யாம், மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை, பீஸ்ட் என பல படங்கள் உள்ளன. இந்தநிலையில் அவரை அடுத்தபடியாக மூன்று புதிய தெலுங்கு படங்களில் நடிக்க ஒப்பந்தம் செய்துள்ளனர். என்றாலும், தற்போது நடித்து வரும் படங்களின் படப்பிடிப்பு லாக்டவுன் காரணமாக தாமதமாகி வருவதால் அவரால் புதிய படங்களுக்கு சரியானபடி கால்சீட் தேதிகளை ஒதுக்க முடியவில்லையாம்.
அதனால், தற்போது அவர் கைவசமுள்ள ஆச்சார்யா, ராதே ஷ்யாம், இளங்கலை ஆகிய படங்களை ஒவ்வொன்றாக முழுமையாக முடித்துக்கொடுக்கும் பணிகளில் இறங்கியிருக்கிறார். அந்தவகையில், ராதே ஷ்யாம் படத்தில் தனக்கான காட்சிகளை சமீபத்தில் முடித்துக்கொடுத்துள்ள பூஜாஹெக்டே, ஆச்சார்யா படத்தில் ஒரேயொரு பாடலை மட்டுமே பேலன்ஸ் வைத்திருக்கிறார்.
இந்த நிலையில் தற்போது 2019ல் தொடங்கப்பட்ட மோஸ்ட் எலிஜிபிள் இளங்கலை என்ற படத்தின் படப்பிடிப்பில் கலந்து கொண்டுள்ளார். இப்படத்தில் அகில் அக்கினேனியுடன் நடித்து வரும் பூஜாஹெக்டே, இந்த படத்தை முழுமையாக நடிப்பதற்குள் ஆச்சார்யா பட பாடலையும் முடித்து விட திட்டமிட்டிருக்கிறார். அதன்பிறகே புதிதாக கமிட்டாகியுள்ள படங்களுக்கு அடுத்தடுத்து தேதிகளை ஒதுக்க முடிவு செய்துள்ளார் பூஜா ஹெக்டே.