என் படங்களுக்காக ரசிகர்களை எதிர்ப்பார்ப்புடன் காத்திருக்க வைப்பேன்! - விஷ்ணு விஷால் | விளையாட்டால் நிகழும் பிரச்னையே ‛கேம்' : சொல்கிறார் ஷ்ரத்தா ஸ்ரீநாத் | நெல் விவசாயத்தில் இறங்கிய நயன்தாரா பட இயக்குனர் | தெலுங்கில் முதல் முறையாக நுழைந்த அக்ஷய் கன்னா ; சுக்ராச்சாரியார் கதாபாத்திரத்தில் நடிக்கிறார் | கன்னட நடிகர் தர்ஷனுக்கு தனிமை சிறை ஏன்? நீதிமன்றத்தில் மனு தாக்கல் | 'திரிஷ்யம் 3' ; ஜீத்து ஜோசப் வெளியிட்ட முதல் புகைப்படம் | ஜீவாவின் 'தலைவர் தம்பி தலைமையில்' படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியானது! | காதலில் கரைபவர் வெகு சிலரே : தனுஷின் ‛தேரே இஷ்க் மே' டீசர் வெளியீடு | கமல் பிறந்தநாள் : ரீ-ரிலீஸாகும் ‛நாயகன்' | படிப்புக்கும் நடிப்புக்கும் சம்பந்தமில்லை: பள்ளிகால அனுபவம் பகிர்ந்த அனுபமா பரமேஸ்வரன் |
ஒளிப்பதிவாளர் ராஜீவ் மேனனின் தாயாரும், பின்னணி பாடகியுமான கல்யாணி மேனன்(80) உடல்நலக் குறைவால் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார். இந்நிலையில் சிகிச்சை பலன் இன்றி இன்று(ஆக., 2) காலமானார். நல்லதொரு குடும்பம் படத்தில் செவ்வானமே பொன் மேகமே என்ற பாடல் மூலம் பாடகியாக அறிமுகமான இவர், தொடர்ந்து புதிய மன்னர்கள்(பாடல் : வாடி சாத்துக்குடி), காதலன்(பாடல் : இந்திரையோ இவள் சுந்தரியோ), முத்து(பாடல் : குலுவாலிலே) அலைபாயுதே(பாடல் : அலைபாயுதே) உள்ளிட்ட பல படங்களில் பாடி உள்ளார். இவரது மறைவுக்கு திரையுலகினர் இரங்கல் தெரிவித்துள்ளனர். இறுதிச்சடங்கு நாளை(ஆக., 3) மதியம் 2மணிக்கு பெசன்ட் நகரில் உள்ள மயானத்தில் நடக்கிறது. கல்யாணி மேனின் இரு மகன்களில் ஒருவரான ராஜீவ் மேனன், இந்திய சினிமாவில் முன்னணி ஒளிப்பதிவாளராகவும், தமிழில் பிரபல இயக்குனராகவும் உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.