2025, இந்தியாவில் 500 கோடி கடந்த இரண்டாவது படம் 'காந்தாரா சாப்டர் 1' | பேட்ரியாட் படப்பிடிப்புக்காக லண்டன் கிளம்பிய மம்முட்டி | போன வாரமும் ஏமாற்றம் : தீபாவளியாவது களை கட்டுமா? | அக்கா, தங்கை, அம்மாவாக நடிப்பேன்: ரஜிஷா விஜயன் | அல்லு அர்ஜுன் ரசிகர் மன்றம் பதிவுடன் ஆரம்பம் | அன்றும்... இன்றும்... மணிகண்டனின் தன்னம்பிக்கைப் பதிவு | சினிமா வருமானம் போச்சு: அமைச்சர் பதவியை ராஜினாமா செய்ய சுரேஷ் கோபி முடிவு | மனநல தூதர் ஆனார் தீபிகா | திருத்தங்களுடன் வெளிவருகிறது 'அஞ்சான்' | எனக்கு படங்கள் இல்லையா? : மொய் விருந்தில் ஆவேசமான ஐஸ்வர்யா ராஜேஷ் |
பாகுபலி என்கிற வரலாற்று படத்தை தொடர்ந்து சாஹோ என்கிற கமர்சியல் ஆக்சன் படத்தில் நடித்தார் பிரபாஸ். தற்போது நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் காதல் பின்னணியில் உருவாகியுள்ள ராதே ஷ்யாம் என்கிற படத்தில் நடித்து முடித்துள்ளார். கதாநாயகியாக பூஜா ஹெக்டே நடித்துள்ள இந்தப்படத்தை ராதா கிருஷ்ணகுமார் என்பவர் இயக்கியுள்ளார்..
இந்தப்படத்தின் படப்பிடிப்பு முடிவடைந்து போஸ்ட் புரொடக்ஷன் பணிகள் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளன. ஆனாலும் இந்தப்படத்தின் அப்டேட் குறித்து சமீபகாலமாக தகவல்கள் எதுவும் வெளியாகவில்லை. இந்தநிலையில் படத்தின் இயக்குனர் ராதா கிருஷ்ணகுமார், தனது டுவிட்டர் பக்கத்தில் “இறுதிக்கட்ட படப்பிடிப்பை முடித்துவிட்டோம்.. மூன்றே நாட்கள் பொறுத்திருங்கள் அன்பான டார்லிங் (பிரபாஸ்) ரசிகர்களே. அதிகாரப்பூர்வமான அப்டேட் வெளியாக போகிறது” என வேண்டுகோள் வைத்து பிரபாஸ் ரசிகர்களின் ஆர்வத்தை தூண்டிவிட்டுள்ளார்.