பாலியல் புகார் எதிரொலி ; ஜானி மாஸ்டரின் மனைவியும் கைதாகிறார் | வெங்கடேஷின் படப்பிடிப்பு தளத்திற்கு சர்ப்ரைஸ் விசிட் அடித்த பாலகிருஷ்ணா | நடிக்கவில்லை.. மகனாகவே வாழ்ந்தேன் ; கவியூர் பொன்னம்மா குறித்து மோகன்லால் உருக்கம் | தேவரா கூட்டணியில் துல்கர் சல்மான் ; பின்னணி இதுதான் | ஜெயிலர் விநாயகன் போல வேட்டையனால் வெளிச்சம் பெறுவாரா சாபுமோன் ? | துப்பாக்கி கனம் எப்படி இருக்கு?: சிவகார்த்திகேயன் சொன்ன பதில் | புதிய வெப் தொடரில் சமந்தா | ரஜினி இப்போதும் ஜொலிப்பதன் காரணம்: அமிதாப்பச்சன் உடைத்த ரகசியம் | என் அண்ணன் சூர்யா மிகப்பெரிய வில்லன்! - கார்த்தி வெளியிட்ட தகவல் | காலில் அறுவை சிகிச்சை செய்தபோதும் ரஜினியின் மனசிலாயோ பாடலுக்கு நடனமாடிய திவ்யதர்ஷினி! |
அசோக் செல்வன், அபி ஹாசன், மணிகண்டன், பிரவீன் ராஜா, ரிய்த்விகா, அஞ்சு குரியன், ரியா, நாசர், இளவரசு, பானுப்ரியா மற்றும் கே.எஸ்.ரவிக்குமார் ஆகியோர் நடித்துள்ள படம் சில நேரங்களில் சில மனிதர்கள். அறிமுக இயக்குனர் விஷால் வெங்கட் இயக்கியுள்ளார்.
படம் பற்றி அவர் கூறியிருப்பதாவது: இரண்டு நாளில் நடக்கும் ஹைப்பர்லிங்க் கதை. ஒரே சம்பவத்தில் சம்பந்தப்படும் வெவ்வேறு மனிதர்களின் தனித்தனி கதை. படத்தில் வரும் கதாபாத்திரங்கள் நாம் அன்றாடம் சந்திப்பவர்களாக இருப்பார்கள். இதனால் பார்வையாளர்கள் படத்தோடு தங்களை பொருத்திக் கொள்வார்கள். அனுபவம் வாய்ந்த கலைஞர்கள் புதுமுக இயக்குனரின் படம் என்று பார்க்காமல் மிகுந்த ஒத்துழைப்பு கொடுத்து நடித்துக் கொடுத்தார்கள்.
விக்ரம் வேதா படத்திற்கு வசனம் எழுதிய மணிகண்டன், இப்படத்திற்கான வசனங்களை எழுதியுள்ளார். கே.டி (எ) கருப்புதுரை படத்தில் பணியாற்றிய மெயேந்திரன் கெம்புராஜ் இப்படத்தின் ஒளிப்பதிவாளராகவும், அர்ஜுன் ரெட்டி புகழ் ராதன் இசை அமைப்பாளராகவும் பணியாற்றி உள்ளனர். படப்பிடிப்பை ஜனவரி மாதமே தொடங்கி விட்டோம். கொரோன 2வது அலையால் படப்பிடிப்பை நிறுத்தி வைத்திருந்தோம். இப்போது மீண்டும் பணிகளை தொடங்கி உள்ளோம். என்றார்.