மனைவியை விட்டுச் செல்பவன் நல்ல மனிதன் அல்ல - குஷ்பு பதிவு வைரல் | ஹேமா கமிட்டி ஒரு ‛கேம் சேஞ்சர்' : சம்யுக்தா மேனன் | நடிகை பார்வதி நாயர் மீது வழக்குப்பதிவு: எதற்காக தெரியுமா? | தேவரா 1 - ஆறு காட்சிகள், கூடுதல் கட்டண உயர்வு - அரசு ஆணை | ‛குட் பேட் அக்லி' படத்தில் இணைந்த அர்ஜுன் தாஸ் | 100வது நாளில் விஜய் சேதுபதியின் 'மகாராஜா' | விஜய் சேதுபதி வெப் தொடரில் ஜாக்கி ஷெராப், யோகி பாபு | கொரியன் படத்துக்கு இவ்வளவு கூட்டமா? | அமிதாப் பச்சனுக்கு குரல் கொடுத்த பிரகாஷ் ராஜ் | ‛தக் லைப்' படப்பிடிப்பு நிறைவு : சாட்டிலைட் பிசினஸ் எவ்வளவு தெரியுமா...? |
நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் அந்தாலஜி படம் நவரசா. இதில் இன்மை என்ற கதையில் சித்தார்த்தும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்காக இருவரும் ஆன்லைனிலேயே காட்சிகளை நடித்து ஒத்திகை செய்துள்ளனர். இந்த தகவலை பார்வதி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது எனக்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
சித்தார்த்தும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் ஜூம் கால் மூலம் ஆன்லைனில் பேசி காட்சி மற்றும் நடிப்பு குறித்து ரிகர்சல் செய்து கொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்கல் இன்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நடந்ததற்கு நாங்கள் ஆன்லைன் மூலம் செய்து கொண்ட ரிகர்சல் முக்கிய காரணமாக இருந்தது. என்றார்.