தியேட்டர் நெரிசல் பலி - 'ஏ 11' குற்றவாளியான அல்லு அர்ஜுன் | சூர்யா 46வது படத்தின் கதை : தயாரிப்பாளர் வெளியிட்ட தகவல் | ரெட்ட தல, சிறை படங்களின் பாக்ஸ் ஆபீஸ் நிலவரம் | கதை திருட்டு புகாரில் சிக்கிய பராசக்தி : உயர்நீதிமன்றம் போட்ட உத்தரவால் பரபரப்பு | சல்மான்கானின் 60-வது பிறந்தநாள் : திரையுலகினருக்கு மெகா விருந்து | வளர்ந்து வந்த காலத்தில் போட்டிக்குப் போன விஜய்... : அவர் செய்தால் நியாயம், மற்றவர்கள் செய்தால் அநியாயமா...! | தி ராஜா சாப் படத்தில் பைரவி ஆக மாளவிகா மோகனன் | தயாரிப்பாளரை நடிகராக மாற்றும் பாண்டிராஜ் | வார் 2 படத்தால் நஷ்டமா... : தயாரிப்பாளர் விளக்கம் | ஷங்கர் மகனுக்கு ஜோடியாகும் இளம் நாயகி |

நெட்பிளிக்ஸ் தளத்தில் விரைவில் வெளியாக இருக்கும் அந்தாலஜி படம் நவரசா. இதில் இன்மை என்ற கதையில் சித்தார்த்தும், பார்வதியும் இணைந்து நடித்துள்ளனர். இந்த படத்திற்காக இருவரும் ஆன்லைனிலேயே காட்சிகளை நடித்து ஒத்திகை செய்துள்ளனர். இந்த தகவலை பார்வதி வெளியிட்டுள்ளார்.
இதுகுறித்து அவர் மேலும் கூறியிருப்பதாவது: சித்தார்த் கண்களாலேயே பல உணர்வுகளையும் வெளிப்படுத்தும் திறமை வாய்ந்த நடிகர். என்னை விட்டு தூரமாக அவர் நின்றாலும், அவர் கண்களின் வழி அவரது உணர்வுகளை எளிதாக அறிந்து கொள்ள முடியும். இது எனக்கு மிகப்பெரும் உதவியாக இருந்தது. அவருடன் இணைந்து நடித்தது மிக மகிழ்ச்சிகரமான அனுபவமாக இருந்தது.
சித்தார்த்தும், நானும் படப்பிடிப்பிற்கு வருவதற்கு முன்னர் ஜூம் கால் மூலம் ஆன்லைனில் பேசி காட்சி மற்றும் நடிப்பு குறித்து ரிகர்சல் செய்து கொண்டோம். இணையவெளியிலிருந்து அப்படியே படப்பிடிப்பிலும் அதே மாயம் நிகழந்தது அற்புதமாக இருந்தது. எவ்வித தடங்கல் இன்றி, மிக எளிதாக இந்த படப்பிடிப்பு நடந்ததற்கு நாங்கள் ஆன்லைன் மூலம் செய்து கொண்ட ரிகர்சல் முக்கிய காரணமாக இருந்தது. என்றார்.