கோயில் பொக்கிஷ பின்னணியில் உருவாகும் புராண திரில்லர் ‛நாகபந்தம்' | இயக்குனரை தேர்ந்தெடுத்த கதை | ஐஸ்வர்யா ராஜேஷின் தெலுங்கு படம் அறிவிப்பு | வெளியீட்டிற்கு முன்பே லாபம் சம்பாதிக்கும் 'ஜனநாயகன்' | விஷால் 8 கோடி மோசடி குறித்து அரசு அறிக்கை: தயாரிப்பாளர் சங்க தலைவர் தகவல் | பிளாஷ்பேக்: முரளி இரண்டு வேடங்களில் நடித்த படம் | பிளாஷ்பேக்: தமிழில் படமான நோபல் பரிசு எழுத்தாளரின் கதை | பீடி, சுருட்டு குடிக்க பயிற்சி எடுத்த கீதா கைலாசம் | தயாரிப்பாளர் ஆனார் ஆண்ட்ரியா : மாஸ்க் படத்தில் வில்லத்தனமான கேரக்டர் | பிரித்விராஜூக்கு ஜோடியாக நடிக்க ஆசை ; பாக்யஸ்ரீ போர்ஸ் |

கேரளாவை சேர்ந்த பிரஜன் தமிழ் தொடர்களில் நடித்து புகழ் பெற்றார். பெண், அஞ்சலி, இது ஒரு காதல் கதை, காதலிக்க நேரமில்லை, கோகுலத்தில் சீதை, கடமை கண்ணியம் கட்டுப்பாடு, சின்னதம்பி, அன்புடன் குஷி உள்பட பல தொடர்களில் நடித்தார்.
ஆனாலும் பிரஜனுக்கு சினிமாவில் ஜெயிக்க வேண்டும் என்பது தான் கனவு. இடையிடையில் சில படங்களில் நடித்தாலும் சினிமாவில் அவர் நினைத்த இடத்தை பிடிக்க முடியவில்லை. பழைய வண்ணாரப்பேட்டை, மணல் நகரம் அவர் நடித்த படங்களில் முக்கியமானது. கடைசியாக மலையாளத்தில் வெளிவந்த லவ் ஆக்ஷன் டிராமா படத்தில் நடித்திருந்தார்.
இப்போது தமிழில் மீண்டும் ஹீரோவாகிறார். சிலந்தி படத்தை இயக்கிய ஆதிராஜன் இயக்கும் நினைவெல்லாம் நீயடா படத்தில் பிரஜன் தான் ஹீரோ. அவருடன் மதுமிதா, காளி வெங்கட், மயில்சாமி, கேப்ரில்லா, சினாமிகா உள்பட பலர் நடிக்கிறார்கள். ஹீரோயின் தேர்வு நடந்து வருகிறது.
"இது ஒரு காதல் கதை. இளையராஜாவின் இசையால் அந்த காதல் வழியப்போகிறது. சென்னை, புதுச்சேரி, மதுரை, கூர்க் பகுதிகளில் படப்பிடிப்பு நடக்கிறது" என்கிறார் இயக்குனர் ஆதிராஜன்.




