அல்லு அர்ஜுன் - அட்லி படத்தில் நெகட்டிவ் ரோலில் ராஷ்மிகா மந்தனா? | மீண்டும் காப்பி சர்ச்சையில் சிக்கிய அனிருத்! | வேள்பாரி நாவல்: ஷங்கருக்கு எதிராக வெளியான ட்ரோல்கள்! | விஜய் சேதுபதி படத்தில் வில்லி வேடத்தில் தபு! | ஐபிஎல் போட்டி நேரத்திற்கு இணையாக ‛பாகுபலி தி எபிக்' ரன்னிங் டைம் | மோகன்லால் உடன் நடிக்க விருப்பம்: நடிகை ஷில்பா ஷெட்டி | விஜய் சேதுபதியின் தங்கை கதாபாத்திரம்: நடிகை ரோஷினி நெகிழ்ச்சி | கோட்டா சீனிவாச ராவ் மறைவு: தெலுங்கு சினிமா பிரபலங்கள் இரங்கல் | வலிகள் இல்லாமல் வாழ்க்கை இல்லை! அனுபவம் பேசும் கவிஞர் பா.விஜய் | இயக்குனரிடம் நிபந்தனை போட்ட அமரன் |
சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மேற்கு வங்கத்தில் நடைபெறும் நிலையில் நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துக் கொடுக்கிறார் ரஜினி. மேலும், அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக ரஜினியின் 169ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 170ஆவது படத்தை தனுசும் இயக்குவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பதோடு, இந்த படங்களோடு ரஜினி சினிமாவுக்கு முழுக்குப்போட திட்டமிட்டிருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ரஜினி வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் சொல்லும் பதில் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது நடிப்புக்கு முழுக்குப்போடும் எண்ணம் ரஜினியிடம் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள். அவரைப் பொறுத்த வரை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டேயிருப்பார். அதிலும் தற்போது வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் ரஜினிக்கு ஆர்வம் மிகுதியாக உள்ளது. அதனால் இன்னும் இரண்டு படங்களோடு ரஜினி நடிப்புக்கு முழுக்குப்போடுவதாக வெளியான செய்தி உண்மையில்லை என்கிறார்கள்.