காந்தாரா சாப்டர்-1 : நேஷனல் கிரஷ் ஆன ருக்மணி வசந்த்! | மீண்டும் ஹிந்தியில் கால் பதிக்கும் ராஷி கண்ணா! | 82 கோடி வசூல் : தெலுங்கு ரசிகர்களுக்கு நன்றி தெரிவித்த ரிஷப் ஷெட்டி! | பிரதமருடன் நடிகர் ராம் சரண் சந்திப்பு | செருப்பு அணிந்து அபுதாபி மசூதிக்குள் சென்றாரா சோனாக்ஷி சின்ஹா? | 3வது முறையாக ரஜினி- நெல்சன் கூட்டணி இணையப்போகிறது? | மலையாளிகளிடம் அங்கீகாரம் தந்தது 'ராவண பிரபு' படம் தான் ; ரீ ரிலீஸ் குறித்து வசுந்தரா தாஸ் மகிழ்ச்சி | ஒரிஜினலை விட டீப் பேக் வீடியோவுக்கு வியூஸ் அதிகம் ; ஜிமிக்கி கம்மல் நடிகை விரக்தி | பண்ணை வீடு திருட்டு சம்பவம் ; துப்பாக்கி லைசென்ஸுக்கு விண்ணப்பித்த சங்கீதா பிஜ்லானி | சுஹர்ஷ் ராஜ் நடித்த மியூசிக் வீடியோ: அனூப் ஜலோடா, பாடகி மதுஸ்ரீ பாராட்டு |
சிவா இயக்கும் அண்ணாத்த படத்தில் நடித்து வருகிறார் ரஜினி. இந்த படத்தின் படப்பிடிப்பு நாளை முதல் மேற்கு வங்கத்தில் நடைபெறும் நிலையில் நான்கு நாட்கள் படப்பிடிப்பில் கலந்து கொண்டு தனக்கான காட்சிகளில் நடித்து முடித்துக் கொடுக்கிறார் ரஜினி. மேலும், அண்ணாத்த படம் தீபாவளிக்கு வெளியாகும் நிலையில், அடுத்தபடியாக ரஜினியின் 169ஆவது படத்தை தேசிங்கு பெரியசாமியும், 170ஆவது படத்தை தனுசும் இயக்குவதாக செய்திகள் வெளியாகிக் கொண்டிருப்பதோடு, இந்த படங்களோடு ரஜினி சினிமாவுக்கு முழுக்குப்போட திட்டமிட்டிருப்பதாகவும் சமீபத்தில் செய்திகள் வெளியாகின.
இதுகுறித்து ரஜினி வட்டாரங்களில் விசாரித்தபோது, அவர்கள் சொல்லும் பதில் வேறு மாதிரியாக உள்ளது. அதாவது நடிப்புக்கு முழுக்குப்போடும் எண்ணம் ரஜினியிடம் இப்போதைக்கு இல்லை என்கிறார்கள். அவரைப் பொறுத்த வரை தொடர்ந்து சினிமாவில் நடித்துக் கொண்டேயிருப்பார். அதிலும் தற்போது வித்தியாசமான சிந்தனை கொண்ட இளைய தலைமுறை இயக்குனர்களின் படங்களில் நடிப்பதில் ரஜினிக்கு ஆர்வம் மிகுதியாக உள்ளது. அதனால் இன்னும் இரண்டு படங்களோடு ரஜினி நடிப்புக்கு முழுக்குப்போடுவதாக வெளியான செய்தி உண்மையில்லை என்கிறார்கள்.