திருப்பதி அடிவாரத்தில் நடுரோட்டில் பிச்சை எடுக்க வைத்து விட்டார் சேகர் கம்முலா! வைரலாகும் தனுஷின் வீடியோ | ஜூனியர் என்டிஆர்-க்கு ஜோடியாகும் ருக்மணி வசந்த்! | கவர்ச்சிக்கு நோ சொல்லும் ரக்ஷிதா | மலேசியாவில் ஓய்வெடுக்கும் பாரதிராஜா | நெல் ஜெயராமன் மகனுக்கு உதவும் சிவகார்த்திகேயன் | ஆசியாவிலேயே மிகப்பெரிய செட் எது தெரியுமா? | விறுவிறுப்பாக நடந்து வரும் 'கூலி' வியாபாரம் | 'தக் லைப்' விவகாரம் : கன்னட அமைப்புகளுக்கு கர்நாடக துணை முதல்வர் வேண்டுகோள் | அதர்வாவுக்கு திருப்பத்தைத் தருமா 'டிஎன்ஏ'? | விமர்சனங்களால் கவலையில்லை.. கடைசி காலத்தில் இதை பார்த்து மகிழ்வேன் : அஜித் பேட்டி |
தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இமான். ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், இப்போது கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார். இவருடன் சஹானா என்ற சிறுமியும் பாடுகிறார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் தான் இவர்களை பாட வைக்கிறார் இமான். இதுப்பற்றிய அறிவிப்பை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் இமான்.
தான் இசையமைத்த அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி சமூகவலைதளங்களில் பிரபலமானார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. இவரது திறமையை பார்த்து ஜீவா நடிப்பில் தனது இசையில் வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட வாய்ப்பு அளித்தார் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.