ஓடிடி தளத்திலும் வெளியாகும் 'பாகுபலி தி எபிக்' | 31 வருடங்களுக்கு பிறகு ரீ ரிலீஸிற்கு தயாராகும் சுரேஷ் கோபியின் கமிஷனர் | பக்தி பழமாக, அம்மாவாக நடித்த ராதிகா | என் கதையை காப்பி அடித்தவர்கள் உருப்படவில்லை: எழுத்தாளர் ராஜேஷ்குமார் கோபம் | நடிகை கடத்தல் வழக்கில் டிசம்பர் 8ம் தேதி தீர்ப்பு | ராம்சரணுடன் ஆர்வமாக புகைப்படம் எடுத்த அமெரிக்க அதிபரின் மகன் | எதிர்மறை விமர்சனம் எதிரொலி : விலாயத் புத்தா படத்தில் 15 நிமிட காட்சிகள் நீக்கம் | ஜோசப் ரீமேக்கை பார்க்காமலேயே தர்மேந்திரா மறைந்து விட்டார் : மலையாள இயக்குனர் வருத்தம் | ஆஸ்கர் நாமினேஷனில் 'மகா அவதார் நரசிம்மா' | நான் கார்த்தியின் தீவிர ரசிகை : கிர்த்தி ஷெட்டி |

தமிழ் சினிமாவில் முன்னணி இசையமைப்பாளராக வலம் வருகிறார் இமான். ரஜினியின் அண்ணாத்த உள்ளிட்ட பல படங்களுக்கு இசையமைத்து வரும் இவர், இப்போது கேரளாவை சேர்ந்த மாற்றுத்திறனாளி சிறுவன் ஆதித்யா சுரேஷிற்கு தனது படத்தில் பாட வாய்ப்பு அளித்துள்ளார். இவருடன் சஹானா என்ற சிறுமியும் பாடுகிறார். ராகவன் இயக்கத்தில் பிரபுதேவா நடிக்க உள்ள ஒரு புதிய படத்தில் தான் இவர்களை பாட வைக்கிறார் இமான். இதுப்பற்றிய அறிவிப்பை தனது சமூகவலைதளத்தில் பகிர்ந்துள்ளார் இமான்.
தான் இசையமைத்த அஜித்தின் விஸ்வாசம் படத்தில் இடம் பெற்ற கண்ணான கண்ணே பாடலை பாடி சமூகவலைதளங்களில் பிரபலமானார் மாற்றுத்திறனாளி திருமூர்த்தி. இவரது திறமையை பார்த்து ஜீவா நடிப்பில் தனது இசையில் வெளியான சீறு என்ற படத்தில் மதுவந்தியே என்ற பாடலை பாட வாய்ப்பு அளித்தார் இமான் என்பது குறிப்பிடத்தக்கது.