ஆண்களுக்கும் 'பீரியட்ஸ்' ; சலசலப்பை கிளப்பிய ராஷ்மிகாவின் கருத்துக்கு பெருகும் ஆதரவு | ரூ.100 கோடி வசூலை குவித்த 'டியூட்' முதல் வரிசை கட்டும் இந்த வார ஓடிடி ரிலீஸ்....! | பிரதமர் மோடியின் அம்மா வேடத்தில் நடிக்கும் ரவீனா டாண்டன் | ஜேசன் சஞ்சய் எடுத்த சரியான முடிவு : விக்ராந்த் வெளியிட்ட தகவல் | உபேந்திரா-பிரியங்கா திரிவேதி மொபைல் போன்களை ஹேக் செய்த பீஹார் வாலிபர் கைது | லோகா படத்தின் புதிய பாகத்தில் மம்முட்டி : துல்கர் சல்மான் தகவல் | நாகார்ஜுனா மீதான அவதூறு கருத்துக்கு ஒரு வருடம் கழித்து வருத்தம் தெரிவித்த தெலுங்கானா அமைச்சர் | சின்மயியிடம் தொடர்ந்து கோரிக்கை வைத்த ஜானி மாஸ்டரின் மனைவி | 'ஜனநாயகன்' வாங்குவதில் வினியோகஸ்தர்கள் தயக்கம் ? | ராஜமவுலி, மகேஷ்பாபு பட தலைப்பு அறிவிப்பு விழா, பிரம்மாண்ட ஏற்பாடுகள் |

தென்னிந்தியத் திரையுலகத்தில் இந்த ஆண்டில் வெளிவர உள்ள படங்களில் சில படங்கள் அதிக எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளன. கன்னடத்தில் தயாராகியுள்ள 'கேஜிஎப் 2', தெலுங்கில் தயாராகியுள்ள 'புஷ்பா' ஆகிய இரண்டு படங்களும் அதில் அடங்கும். இந்த இரண்டு படங்களையும் தென்னிந்திய மொழிகளுடன் ஹிந்தியிலும் வெளியிட உள்ளார்கள்.
அல்லு அர்ஜுன் நடித்துள்ள 'புஷ்பா' படம் இரண்டு பாகங்களாக வெளிவர உள்ளது. அதன் முதல் பாகத்தை இந்த வருட கிறிஸ்துமஸ் விடுமுறையில் வெளியிட முடிவு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. யஷ் நடித்துள்ள 'கேஜிஎப் 2' படத்தையும் அதே விடுமுறையில் வெளியிடப் போவதாக நேற்று செய்திகள் வெளியாகின.
இப்படி இரண்டு பிரம்மாண்ட படங்களும் ஒரே சமயத்தில் வெளியானால் தியேட்டர்களைப் பிடிக்க கடும் போட்டி நிலவும். அதிலும் இரண்டு படத்தையுமே பான்-இந்தியா படமாகத்தான் வெளியிடப் போகிறார்கள். இப்படி ஒரே சமயத்தில் போட்டி போட்டால் வேறு எந்த படங்களும் அந்த நேரத்தில் வெளியாக முடியாது.
இதில் ஏதாவது மாற்றம் வருமா இல்லையா என்பது விரையில் தெரிந்துவிடும்.