300 மில்லியன் பார்வைகளைக் கடந்த 'வாயாடி பெத்த புள்ள' | யு டியூப் தளத்தில் 'டாப் வியூஸ்' பெற்ற தமிழ் பாடல்கள் : ஒரு ரீவைண்ட்…! | 23 நாளில் படப்பிடிப்பு... ரூ.25 லட்சத்தில் படம் : வியக்க வைக்கும் ‛மாயக்கூத்து' | ராஜா சாப் படத்தில் விக் வைத்து நடிக்கிறாரா பிரபாஸ்? : ரசிகர்களுக்கு எழுந்த புதிய சந்தேகம் | ராமாயணா முதல் பாகத்தில் யஷ் வருவது வெறும் 15 நிமிடங்கள் தான் | மலையாளத்தில் டைம் ட்ராவல் பின்னணியில் உருவாகும் 'ஆடு 3' | சுதீப்பின் 47வது படம் அறிவிப்பு : ஜூலையில் துவங்கி டிசம்பரில் ரிலீஸ் | குழந்தையை தத்தெடுத்து வளர்க்க திட்டமிடும் ஸ்ருதிஹாசன் | அட்லி இயக்கும் விளம்பரத்தில் நடிக்கும் ரன்வீர் சிங், ஸ்ரீ லீலா | ராம் பொத்தினேனி எழுதிய பாடலை பின்னணி பாடிய அனிருத் |
முன்பெல்லாம் டிவி நடிகைகள் என்றாலே சினிமாவில் காமெடி, அக்கா, அண்ணி வேடங்கள் தான் தருவார்கள். தற்போது பிரியா பவானி சங்கர், வாணி போஜன், பவித்ரா என டிவியில் இருந்து வருபவர்கள் நாயகிகளாக நடிக்க தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து வாணி போஜனிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு அவர் கூறியுள்ளதாவது, ‛‛இது ஒரு டிரெண்ட் செட்டிங் தான். எங்களை போல இன்னும் நிறைய திறமையான நடிகைகள் டிவியில் இருந்தும் வர வேண்டும். சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது நிறையவே சவால்கள் இருந்தன. சில படங்கள் கமிட் ஆகி நின்றன. ஆனால் என்னை ஊக்கப்படுத்தி நல்ல கதாபாத்திரம் கொடுத்து பார்த்தவர் அஷ்வத் மாரிமுத்து தான். ஓ மை கடவுளே படம் எனக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. நான் நேரடியாக சினிமாவுக்கு வந்திருந்தால் கூட இந்த பிரபலம் கிடைத்திருக்குமா என தெரியாது. டிவி மூலமாக எல்லா குடும்பங்களிடமும் சென்றுவிட்டேன். சத்யா என்று அந்த பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள். 'சினிமாவை விடுங்கள். எப்போது டிவிக்கு மீண்டும் வருவீர்கள்? என்று கேட்கிறார்கள்''.