''நான் அதிர்ஷ்டசாலி'': நல்ல நண்பராக மணிகண்டன் கிடைத்த மகிழ்ச்சியில் ஷான்வி | 'கேம் சேஞ்சர்'--ல் விட்டதை 'பெத்தி'யில் பிடித்த ராம் சரண் | தயாரிப்பாளர் எம்.ராமநாதன் காலமானார் | குட் பேட் அக்லி - எந்த விழாவும் இல்லை, எந்த சந்திப்பும் இல்லை | ஆரம்பித்த இடத்திற்கே மீண்டும் வந்துள்ள ஹரி | மாரீசன் படத்தில் கோவை சரளா | உங்கள் ஊகங்களை நிறுத்துங்கள்: ரசிகருக்கு அட்வைஸ் செய்த மாளவிகா மோகனன் | 'சந்தோஷ்' படத்தை வெளியில் திரையிடுவேன் : பா ரஞ்சித் அடாவடி | பிளாஷ்பேக்: பைந்தமிழ் கற்பதில் தாமதம்; பட வாய்ப்பை இழந்த நடிகை பண்டரிபாய் | மே 16ல் ரீ-ரிலீஸாகும் ஆட்டோகிராப் |
முன்பெல்லாம் டிவி நடிகைகள் என்றாலே சினிமாவில் காமெடி, அக்கா, அண்ணி வேடங்கள் தான் தருவார்கள். தற்போது பிரியா பவானி சங்கர், வாணி போஜன், பவித்ரா என டிவியில் இருந்து வருபவர்கள் நாயகிகளாக நடிக்க தொடங்கியுள்ளனர்.
இதுகுறித்து வாணி போஜனிடம் ஒரு பேட்டியில் கேட்டதற்கு அவர் கூறியுள்ளதாவது, ‛‛இது ஒரு டிரெண்ட் செட்டிங் தான். எங்களை போல இன்னும் நிறைய திறமையான நடிகைகள் டிவியில் இருந்தும் வர வேண்டும். சீரியலில் இருந்து சினிமாவுக்கு வந்தபோது நிறையவே சவால்கள் இருந்தன. சில படங்கள் கமிட் ஆகி நின்றன. ஆனால் என்னை ஊக்கப்படுத்தி நல்ல கதாபாத்திரம் கொடுத்து பார்த்தவர் அஷ்வத் மாரிமுத்து தான். ஓ மை கடவுளே படம் எனக்கு நல்ல அறிமுகமாக அமைந்தது. நான் நேரடியாக சினிமாவுக்கு வந்திருந்தால் கூட இந்த பிரபலம் கிடைத்திருக்குமா என தெரியாது. டிவி மூலமாக எல்லா குடும்பங்களிடமும் சென்றுவிட்டேன். சத்யா என்று அந்த பெயரை சொல்லித்தான் அழைக்கிறார்கள். 'சினிமாவை விடுங்கள். எப்போது டிவிக்கு மீண்டும் வருவீர்கள்? என்று கேட்கிறார்கள்''.